21/09/2018

தந்தையை தூக்கிலிட கோரி மகள் பிரமாண்ட பேரணி.. காதல் கணவரை கொன்றதால் ஆவேசம்...


தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், மிர்யாலகுடா பகுதியைச் சேர்ந்த பெருமல்ல பிரனய்குமார் என்பவர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனியார் மருத்துவமனை வளாகத்தில் கொலை செய்யப்பட்டார்.

பிரனய்யை கூலிப்படை ஏவி தனது தந்தை கொலை செய்திருப்பதாக அம்ருதவர்ஷினி குற்றம் சாட்டினார். பிரனய் கொல்லப்பட்ட வழக்கில், அம்ருதவர்ஷினியின் தந்தை மாருதி ராவ், சகோதரர் ஷ்ரவண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களது நண்பர் அப்துல் கரீம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பிரனய்யை பின்னால் இருந்து கத்தியால் தாக்கியதாக கூறப்படும் பீகாரைச் சேர்ந்த ஷர்மா என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அம்ருதவர்ஷினி, தந்தைக்கு எதிராக பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். கணவர் வினய்யை கொலை செய்த தந்தையை தூக்கிலிடக்கோரி வரும் 23 ஆம் தேதி இளைஞர்களைத் திரட்டி பேரணி நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.