13/09/2018

தமிழகத்தில் சூடுபிடித்து வலம் வரும் தமிழ் கையெழுத்து விழா...


ஆறிலிருந்து அறுபது வயதான அத்தனை நபர்களும் தன் கையெழுத்தை தமிழிலே மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியாக கையெப்பம் இட்டவர்கள் இனி ஆங்கிலத்தை எந்த சூழ்நிலையிலும் கையெழுத்திற்காக பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதியையும் கொடுத்துள்ளார்கள்...

இந்த அசாத்திய நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் செவ்வென செய்து முடிக்க 'மக்கள் பாதை' இயக்கத்தின் இளைஞர்கள் பணியமர்த்தப் பட்டிருக்கிறார்கள் தமிழகம் மட்டுமின்றி 'சிங்கப்பூர் மலேசியா சவூதி அரேபியா துபாய் அமேரிக்கா போன்ற அத்துனை நாடுகளில் வாழும் தமிழர்களிடத்திலும் இந்த உறுதிமொழி கையெப்பம் வாங்கி இருபது குறிப்பிடத்தக்கது..

இப்படி தமிழகம் முழுவதும் வாங்கிய கையப்பத்தின் எண்ணிக்கை மட்டும் இன்னும் சில தினங்களில் ஒருகோடி எண்ணிக்கையை எட்ட இருக்கிறது..
இதை கின்னஸ் சாதனையாக்கவும் தயாராகி வருகிறார்கள் நம் இளைஞர்கள்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.