14/11/2018

எலி மிச்சம் வைத்த ஒரே பழம் – எலுமிச்சை...


எலுமிச்சை ஒரு தேவகனி. இந்த பழத்தின் பெயர் காரணமே ஒரு அற்புதமாகும்.

அதாவது, எலுமிச்சையின் மணம் எலிக்கு ஆகாது. மீதி உள்ள எல்லா பழங்களையும் எலி கடித்து குதறி விடும், எலுமிச்சை தவிர்த்து. பெயரிலேயே இத்தனை சக்தி வாய்ந்த இந்த பழம் ஒரு அற்புதம். புளிப்பு சுவை உடைய எளிமிச்சை சிட்ரஸ் குடும்ப காய் கனி வகைகளை சேர்ந்தது.

எலுமிச்சை பல்வேறு வகையில் மருந்தாக வேலை செய்கிறது. அதனை சிறு குறிப்புகள் மூலம் இப்போது பார்க்கலாம்.

வாந்தி மற்றும் வயிற்றுப்பிரட்டலுக்கு சிறந்த கைமருந்து எலுமிச்சை. நல்ல வாசமுள்ள எலுமிச்சையை முகர்ந்தாலே குமட்டுல் நின்று விடும்.

வயிற்று பொருமல், வாயு தொல்லை, அஜீரணம், உப்பசம் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகிய தொந்தரவுகளுக்கு எலுமிச்சை சிறந்த மருந்தாகும். ஒரு டம்ப்ளர் எலுமிச்சை சாறு அருந்தினால் போதும். வயிறு தொடர்பான தொந்தரவுகள் யாவும் காணாமல் போகும்.

எலுமிச்சை சாருடன் சிறிது தேன் கலந்து வெது வெதுப்பான நீரை காலை வெறும் வயிற்றில் அருந்தினால் உடல் பருமன் குறையும்.

உடலின் அமிலத்தன்மையும் காரத்தன்மையும் எலுமிச்சை சமன் செய்கிறது.

எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த ஒரு பழம். இதனால் சருமம் மேம்படும். மேலும் உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

எலுமிச்சை சாறினை முகத்தில் தேய்த்தால் கரும்புள்ளிகள் மறையும்.

கிருமித்தொற்றில் இருந்து பெரிதும் காக்க எலுமிச்சை உதவுகிறது.

உடல் சூடு சார்ந்த எல்லா தொந்தரவுகளுக்கு எலுமிச்சை சிறந்த மருந்தாகும். உதரணாமாக, வேட்டை, நீர்ச் சத்து குறைபாடு, கண் நோய், போன்றவை.

எலுமிச்சை பழம் சாறினை தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும் மற்றிம் பித்தம் குறையும்.
ரத்தக் கொதிப்பை தடுப்பதிலும், சமன் படுத்துவதிலும் எலுமிச்சை பெரும் பங்கு வகிக்கிறது.

எலுமிச்சை குளிர்ச்சியானது, தனமும் உணவில் சேர்த்தாலோ அல்லது சாறு பருகினாலோ சளி மற்றும் காய்ச்சல் வரும் என்ற தவறான எண்ணத்தை மறந்து விடுங்கள்.

சிறு குறிப்பு: எலுமிச்சை சாறு அருந்தும் போது சிறிது உப்பு சேர்த்து கொண்டால் சுவை கூடும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.