02/11/2018

புனித மக்காவில் நடந்த திடீர் யுத்தம்...


உலக வரலாற்றில் எல்லாம் ஏற்கனவே வாழ்ந்த ஒரு வரலாற்று நாயகனையோ அல்லது அரசனையோ அல்லது விஞ்ஞானியையோ பற்றி பேசி இருக்கும்.

ஏன் ஏனைய மதத்தில் கூட அந்த அறிஞர் இப்படி நல்ல மனிதராக போராளியாக வாழ்ந்தார் என்று கூறும்

ஆனால் ஒரு மதத்தில்  பிற்காலத்தில் வரப்போகின்ற மனிதரை பற்றி சிலாகித்து கூறியுள்ளது.

அந்த மதம் இஸ்லாம்

அவருடைய பெயர்

மஹதி.

இவரைபற்றிய முன்னறிவிப்பு முகமது நபி கூறியுள்ளார்

உலகத்தில் விபச்சாரம் பெருகி கொலை கொள்ளை பெருகும் காலகட்டத்தில் பூகம்பம் ஏற்பட்டு உலகமே கூச்சல் குழப்பம் ஏற்படும் காலத்தில் ஒரு போராளியாக மஹதி என்பவர் தோன்றுவார்  அப்படி அவர் வரும்போது உங்களது ஆட்சியை ஒப்படையுங்கள் என்று கூறியுள்ளார்.

இது விஷயமல்ல

இதற்காக இதுவரை நான் தான் மஹதி என்று வரலாற்றில் 

40 க்கும் மேற்பட்ட பொய்யர்கள் வந்துள்ளனர்...

போன நூற்றாண்டு வரைக்கும் இந்த பொய் மஹதிகள் வந்தவண்ணம்  உள்ளனர். . .

கடைசியாக 1979 ம் வருடம் புனித மக்காவில் ஒருவர் வந்து நான் தான் உண்மையான மஹதி என்னிடம் நீங்கள் ஆட்சியை ஒப்படையுங்கள் என்று ஆயுதம் எடுத்து போராடினார் சவூதிக்கு எதிராக.

முழு வருடமும் ஒரு நாட்கள் கூட அடைத்து வைக்கப்படாத மக்காவில் உள்ள புனித காபா கிட்டத்தட்ட ஒரு வார காலம் போர்களமாக காட்சியளித்தது.

மிகவும் கஷ்டப்பட்டு சவுதி அரேபியா அரசு இந்த பொய் மஹதியின் சிரிய படையை வீழ்த்தி சமாளித்தது..

கூடுதல் தகவல் :

இன்றும் சில நாடுகள் எங்கள் பகுதியில் இருந்து தான் அந்த மஹதி வருவார் என அதற்கான ஏற்பாடுகளை செய்தும் வைத்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.