14/12/2018

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவில்...


எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது.

ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர்.

ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர்.

எனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக் கொண்டவர்.

எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக் கொண்டவர்.

எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.

- தமிழினத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.