07/12/2018

இது சாப்பாட்டு தத்துவம்...


தோல்வி என்பது பெருங்காயம் போல... தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும.

ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்.

லட்சியமும் முட்டையும் ஒன்று... தவற விட்டால் உடைந்து விடும்.

சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல.... கிள்ளி எறிந்து விட வேண்டும்.

வாழ்க்கை சிக்கலான இடியாப்பம் தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்.

பொய், நூடுல்ஸ் போல் தற்காலிகமானது: உண்மை இட்லி போல நிரந்தரமானது.

கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள் அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது.

‎தலைக்கனம்  என்பது வெந்நீர் போன்றது... அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள் நம் மீதே சிந்திவிடும்.

தன்னம்பிக்கைச் சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல.. சமைப்பது உங்கள் கையில் தான்.

வெற்றி என்பது இட்லியை போல வேகுவது தெரியாது... வெந்தபின் தான் தெரியும்...

வெற்றி என்ற இட்லியை தனியே உண்ண முடியாது... நட்பு என்ற சட்னி வேண்டும்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.