18/12/2018

திருச்சி காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ, பெண் போலீஸ் நடத்திய காம லீலை...


திருச்சி காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ, பெண் போலீஸ் நடத்திய காம லீலைகளின் 3 நிமிடம் ஆபாச வீடியோ காட்சிகள் வெளியாகி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ.யாக இருப்பவர் பாலசுப்பிரமணி (50). கொடாப்பு என்ற கிராமத்தை சேர்ந்தவர். இதே போலீஸ் நிலையத்தில் கணினி பிரிவில் திருச்சி புத்தூர் நால்ரோட்டை சேர்ந்த ஒரு பெண் போலீஸ் பணியாற்றி வருகிறார். கடந்த 10ம் தேதி இரவு ரோந்து பணியில் பாலசுப்பிரமணி ஈடுபட்டு இருந்தார். ஸ்டேஷனில் பெண் போலீஸ் மட்டும் பணியில் இருந்தார். இந்நிலையில், ரோந்து பணியின் இடையில் 10.30 மணியளவில் காவல் நிலையத்திற்கு எஸ்எஸ்ஐ பாலசுப்பிரமணி வந்தார். அங்கு பெண் போலீஸ் மட்டும் கணினியில் வழக்கு விவரங்களை பதிவு செய்துகொண்டிருந்தார்.

அப்போது, அவர் அருகில் வந்த எஸ்.எஸ்.ஐ. பாலசுப்பிரமணி, ‘‘பனி அதிகமாக உள்ளது, குளிர் தாங்கமுடியவில்லை’’ என பேச்சை தொடங்கி, சிறிது நேரத்தில் அவரது கன்னத்தில் முத்தமிட்டு கட்டி அணைத்துக்கொண்டு காம லீலைகளை தொடங்கினார். அப்போது, உளவுத்துறை போலீஸ் ஒருவர் காவல்நிலையத்திற்கு வந்தார். உடனே, உஷரான அந்த பெண் போலீஸ் உளவுத்துறை போலீஸ்காரரிடம், எஸ்.எஸ்.ஐதான் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து காம லீலைகளில் ஈடுபட்டதாக குமுறி உள்ளார். பெண் போலீசின் கண்ணீரை நம்பி உளவுத்துறை போலீஸ்காரர், இதுகுறித்து மேலிடத்திற்கு ரிப்போர்ட் அனுப்பி உள்ளார். மேலும், மறுநாள் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ், மாவட்ட எஸ்.பியிடம் எஸ்.எஸ்.ஐ மீது பாலியல் தொந்தரவு புகார் அளித்தார். உடனே, எஸ்.பி ஜியா உல்ஹக் சம்பவம் குறித்து முறையாக விசாரிக்காமல், உடனடியாக எஸ்.எஸ்.ஐயை சஸ்பெண்ட் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த எஸ்.எஸ்.ஐ, ‘‘இருவரும் சம்மதத்தோடுதான் ஜாலியாக இருந்தோம். தண்டனை கொடுத்தால் இரண்டு பேருக்கும்தான் கொடுக்கணும்.

எனக்கும் மட்டும் தண்டனை கொடுப்பதில் என்ன நியாயம் இருக்குது’’ என ஆதங்கப்பட்டார்.   இதையடுத்து, சுதாரித்து கொண்ட மாவட்ட எஸ்.பி காவல்நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய டி.எஸ்.பி ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், சம்பவத்தன்று பாலசுப்பிரமணி இரவு 10 மணிக்கு ஸ்டேஷனுக்கு வந்து உள்ளார். அப்போது அங்கு பெண் போலீஸ் பணியில் இருந்தார். சில நொடிகளில் அந்த பெண் போலீஸ் அருகில் செல்லும் அந்த எஸ்.எஸ்.ஐ, அவருக்கு ஒரு முறை முத்தம் கொடுத்துவிட்டு, அவரிடம் பேச்சு கொடுக்கிறார்.

சில நொடிகளில் காமத்தின் உச்சத்திற்கே செல்லும் அவர், அந்த பெண் போலீசின் முகத்தை பிடித்து இழுத்து ‘லிப் டூ லிப்’ அடிக்கிறார். 2 நிமிடம் 50 நொடிகள் ஓடும் வீடியோவில் அந்த பெண் போலீஸ் கொஞ்சமும் எதிர்ப்பு தெரிவிக்காமல் முழு மனதோடு அவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பது தெரியவந்தது.
முன்னதாக இருவரின் காம சேட்டையின் போது, காவல் நிலைய வளாகத்திற்குள் பைக்கில் உளவுத்துறை போலீஸ்காரர் ஒருவர் வருகிறார். அதில், அடிக்கும் லைட் வெளிச்சத்தை பார்த்து இருவரும் ஒதுங்கி இருப்பதும், எஸ்.எஸ்.ஐ வெளியே சென்றதும் உளவுத்துறை போலீஸ்காரரிடம் அந்த பெண் போலீஸ் பொய் புகார் அளித்திருப்பது தெரியவந்துள்ளது.

மெகா திட்டம் போட்ட பெண் போலீஸ்
இருவரின் காம சேட்டை விவரத்தை உளவு பிரிவு போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வெளியே சென்றவுடன், பெண் போலீஸ் வீடியோவில் பதிவான காட்சிகளை தனியாக அவர் பதிவு செய்து கொண்டார். உண்மை வெளிச்சத்துக்கு வந்ததும் எஸ்.எஸ்.ஐ தினமும் எனக்கு கொடுக்கும் பாலியல் தொந்தரவை ஆதாரத்துடன் நிரூபிக்கதான், அந்த உளவுத்துறை போலீஸ்காரரை நான் வரவழைத்தேன் என்று அந்த பெண் போலீஸ் கூறியதாக கூறப்படுகிது. இருப்பினும், வீடியோவில் பதிவான காட்சிகளை பார்க்கும்போது இருவரின் சம்மதத்துடன் காமசேட்டை அரங்கேறியதாக அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனால், மிக விரைவில் அந்த பெண் போலீஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.