08/01/2019

10 பேர் உயிரிழப்பு...



புதுக்கோட்டையில் வேனும், கன்டெய்னர் லாரியும் மோதிக்கொண்ட சம்பவத்தில் ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 9 பேர் உயிரிழந்தனர். காயமுற்றவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 15 பேர், ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று வேனில் திரும்பி கொண்டிருந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே, திருச்சி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில், வேன் மீது எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோதியது.
இந்த சம்பவத்தில் டிரைவர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மீட்பு படையினர் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.