23/01/2019

தமிழ்நாடு ராணுவ மயமாகிறது...


சென்னை, திருச்சி, கோவை, சேலம், ஓசூர் நகரங்கள் இணைக்கப்பட்டு ராணுவ தளவாட தொழில் சாலைகளாகின்றன.

ராணுவ தளவாட தொழில்சாலைகள், வெளிநாடுகளுக்கு ஆயுத உற்பத்தி, இதை ஏற்றுமதி செய்ய ராணுவ வழிப்பாதைகள் என தமிழ்நாடு  ராணுவ மயமாகும். இந்த இடங்கள் அதி உயர் பாதுகாப்பு இடங்கள், தமிழ்நாட்டு உரிமைகள் இங்கு செல்லாது என அறிவிக்கப்படும்.

நிலம், நீர், இயற்கை வளம் ராணுவ தளவாட உற்பத்தி என சுரண்டப்படும். வட நாட்டு மக்கள் லட்சக்கணக்கில் குவிக்கப்படுவர்.

20 ஆண்டுகளுக்கு பின் அரசியல் உணர்வு பெற்று போராடும் தமிழர்களை உணர்ந்து, இன்றே தமிழ்நாட்டை ராணுவ மயமாக்கும் பார்ப்பன பனியா இந்தியாவின் திட்டம் நிறைவேறுகிறது.

கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் வராத ராணுவ தளவாட மையம் தமிழ்நாட்டில் ஏனென்று கேட்க இங்கு நாதி இல்லை.

எதிர்க்க வேண்டிய தமிழக கட்சிகள், இந்த தமிழ்நாட்டு அழிவுக்கு இந்தியாவின் கங்காணிகள் ஆகின்றன.

அடுத்த தமிழ் சந்ததிகளை காக்க தமிழர்களே திரள வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.