25/01/2019

ஊடகங்களே தமிழினத்தின் முதல் எதிரி...


௧) கொலை, கொள்ளை, கற்பழிப்பு இன்னும் பல பதற வைக்கும் கொதிப்படைய செய்யும் பாதகச் செயல்களை நம்மிடம் அனுதினமும் சொல்லி சொல்லி அதை ஒரு சாதாரண செய்தியாக கடந்து போகும் நிலையில் நம் மனதில் பதித்தனர்.

௨) ஒரு இடத்தில் நிகழும் திருட்டு அல்லது சில தீய செயல்களை பல லட்சக்கணக்கான மக்களிடம் சேர்ப்பது அது விழிப்புணர்வுக்கு அல்ல..

இப்படியும் சில தவறுகள் நடக்கிறது என அவர்களுக்கு அந்த தவறுகளை செய்யும் யுக்தியை கற்று தருவது..

௩) பெரும்பாலும் நீ என்ன நினைக்க வேண்டும்? எதை பற்றி பேச வேண்டும் என முடிவு செய்வது அவர்கள் தான்..

எடுத்துக்காட்டாக ட்ரெண்டிங் என சொல்லும் தலைப்புகள் அவர்கள் உருவாக்குப்படுவது தான்.

௪) திசை திருப்புதல் இதை பற்றி சொல்லத் தேவையில்லை. இது தான் அவர்களின் பிரதான நோக்கமே.. அதற்காக தான் அவர்களின் கட்டமைப்பே..

உதாரணத்திற்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அதை ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் இருந்தது நமக்கு தெரிந்ததே..

இது போல் நிறைய உள்ளது மக்கள் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் சினிமா பிரபலங்களை தலையில் வைத்து அதை மறைப்பது..

மக்கள் விரோத திட்டத்தை பேசாமல் ஒரு சுக்குக்கும் பெறாத விஷயங்களை பரப்புவது..

முக்கியமாக சாதி, மத, இன பிரிவினையை உருவாக்குவது. அல்லது ஆபாசம் தொடர்பான நிகழ்வுகளை அதிகம் பரப்புவது.

இவை எல்லாம் மக்கள் இன்னலுக்கு ஆளாகும் நேரத்தில் தான் செய்வார்கள். (தமிழ்நாட்டில் நடந்து கொண்டே தான் இருக்கிறது நுட்பமாக கவனிக்க).

௫) ஊடகங்களில் உள்ள நண்பர்களிடம் கேட்டால் சில திடுக்கிடும் உண்மைகளை சொல்வார்கள்.

எந்த செய்தியை போட வேண்டும் எதை நீக்க வேண்டும் என மிக பெரிய கட்ட பஞ்சாயத்து உள்ளே நடக்கும்.

சில இரகசியங்களை சொல்ல முற்பட்டு தன் உயிரை மாய்த்த உண்மையானவர்களும், உயிருக்கு பயந்து சிலரும் உள்ளனர் ஆனால் வெகு சிலரே..

ஊடகங்கள்  நம்மை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உள்ளேயே சிந்திக்க வைக்கும் அதன் மூலம் மூளையை மழுங்க செய்வது, திசை திருப்புதல் இது தான் அவர்களுக்கு கொடுத்த வேலை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.