01/02/2019

பத்து நிமிட தாமதத்தால், முத்தலாக் கூறி விவாகரத்து...


உத்தரப்பிரதேசத்தில் தாய் வீட்டுக்கு சென்ற மனைவி, வீட்டுக்கு வர 10 நிமிடம் தாமதமானதால் கணவன் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் இட்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கணவரிடம் கூறியுள்ளார். கணவரும் அனுமதிக்கவே, அவர் தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் கணவன், சொன்ன நேரத்திற்குள் மனைவியால் வீடு திரும்ப முடியவில்லை. 10 நிமிடம் தாமதமாக வீட்டுக்கு வந்த தன்னுடைய மனைவிக்கு செல்போனில் மூன்று முறை தலாக் சொல்லியுள்ளார்.

கணவரின் இந்த முத்தலாக்கை ஏற்க மறுத்த அந்தப் பெண், இந்த விவகாரத்தில் தனக்கு நியாயம் கிடைக்க அரசு வழிவகை செய்யவேண்டும் எனவும், இல்லையென்றால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.