01/02/2019

தமிழகத்திலேயே அதிகம் வாக்காளர்கள் கொண்ட தொகுதியானது சோழிங்கநல்லூர்...


தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.91 கோடியாக உயர்ந்துள்ளது என்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.

வாக்காளர் இறுதி பட்டியலை, சத்ய பிரதா சாஹு இன்று வெளியிட்டார். அப்போது சில சுவாரசிய தகவல்கள் வெளியாகின. தமிழகத்தை பொறுத்தவரை 2 கோடியே 92 லட்சம் ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 2 கோடியே 98 லட்சம் பெண் வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர் 5 ஆயிரத்து 472 பேர் உள்ளனர் தமிழகத்தில் 18 வயது முதல் 19 வயது வரை 8 லட்சத்து 98 ஆயிரத்து 759 வாக்காளர்கள் உள்ளனர் 80 வயதுக்கு மேல் 1 லட்சத்து 12 ஆயிரத்து 200 வாக்காளர்கள் உள்ளனர் தமிழகத்திலேயே அதிக அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதி காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்க நல்லூர். இங்கு மொத்தம் 6 லட்சத்து 18 ஆயிரத்து 695 வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்தில் உள்ள துறைமுகம் உள்ளது. 1 லட்சத்து 66 ஆயிரத்து 515 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட அளவில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இங்கு மொத்தம் 38,18,999 வாக்காளர்கள் உள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.