25/02/2019

கரூரில் அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை, தமது விடா முயற்சியால் குரூப் ஒன் தேர்வில் வெற்றி பெற்று, துணை ஆட்சியராகி உள்ளார்...


கரூர் சுக்காலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கணிதப்பிரிவு ஆசிரியையாக உள்ளவர் நிறைமதி. சிறு வயது முதலே ஆட்சியராக வேண்டும் என்ற கனவு கொண்ட இவர், அதற்கான தகுதி தேர்வில் இரு முறை தோல்வி அடைந்தவர். இருந்தாலும் தமது விடா முயற்சியால் 2017ல் நடந்த குரூப் ஒன் தேர்வில் நிறைமதி தேர்ச்சி பெற்றார்.

இதையடுத்து கடந்த மாதம் நடத்தப்பட்ட நேர்காணலில் வெற்றி பெற்ற நிறைமதி, சென்னை துணை ஆட்சியருக்கான பணி ஆணையை பெற்றுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.