21/03/2019

சபலத்தின் விலை ரூ 2 லட்சம்.. பாத்ரூமில் பூட்டி பணம், காரை எடுத்து சென்ற இளம்பெண்...


மருந்து கம்பெனி ஊழியரிடம், 2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தட்டக்கல்லைச் சேர்ந்தவர் சக்திவேல், 40; சென்னையில் மருந்து கம்பெனியில் பணியாற்றி வருகிறார். குடும்பத் தகராறால், மனைவி, 2016ல், குழந்தையுடன், தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.'உல்லாசமாக இருக்க பெண் தேவை' என, புரோக்கர் சீனு, 40, என்பவரை, சக்தி வேல் தொடர்பு கொண்டார்.

அவரது ஏற்பாட்டில், 10ம் தேதி சுவேதா, 25, என்ற பெண்ணுடன், வேலுார் மாவட்டம், ஏலகிரி மலையில் உள்ள, ஒரு விடுதியில், சக்திவேல் தனிமையில் இருந்து உள்ளார்.

அப்போது, குளிக்க சென்ற சக்திவேலை, குளியலறைக்குள் வைத்து பூட்டிய சுவேதா, சக்திவேல் வைத்திருந்த, 2 லட்சம் ரூபாயுடன், அவரது, மாருதி ஸ்விப்ட் டிசையர் காரில் தப்பினாள்.

ஏலகிரி மலை போலீஸ் விசாரணையில், ஆந்திர மாநிலம், திருப்பதிக்கு சுவேதா தப்பிச் சென்றதும், புரோக்கர் சீனு உடந்தையாக இருந்ததும், தெரிந்தது. இருவரையும்,போலீசார் தேடி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.