24/03/2019

உச்சக்கட்ட பேரம்.. கட்சி மாறும் முக்கிய தலைகள்.... தொண்டர்கள் அதிருப்தி...


லோக்சபா தேர்தல், சட்டசபை இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வில், 'சீட்' கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த முக்கிய பிரமுகர்கள், தி.மு.க.,விடம் பேரம் பேசுவதாக தெரிகிறது.

அ.ம.மு.க.,வில், மாவட்ட செயலர் பதவி வகித்த, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அக்கட்சி துணை பொதுச்செயலர் தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தி.மு.க.,வில் இணைந்தார்.

அவருக்கு, அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படும் என, தி.மு.க., தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.

அதேபோல், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட, அ.தி.மு.க.,வில் வாய்ப்பு அளிக்கவில்லை. அதிருப்தி அடைந்த அவர், சமீபத்தில், தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்தார். தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக, ராஜகண்ணப்பன் பிரசாரம் செய்ய உள்ளார்.

அதற்கு பரிசாக, அவருக்கு அடுத்த சட்டசபை தேர்தலில், சீட் வழங்க, தி.மு.க., தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அ.ம.மு.க., சார்பில், மத்திய சென்னையில் போட்டியிட, மாவட்ட செயலர் கலைராஜன் விரும்பினார். ஆனால், அந்த தொகுதியை, கூட்டணி கட்சியான, எஸ்.டி.பி.ஐ.,க்கு, அ.ம.மு.க., ஒதுக்கியது. இதனால், அதிருப்தி அடைந்த கலைராஜன், திருச்சியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார்.

அவருக்கும், அடுத்த சட்டசபை தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. இப்படி, அ.தி.மு.க., - அ.ம.மு.க.,வில், சீட் கிடைக்காத பிரமுகர்கள், பேரம் பேசி, தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.