20/03/2019

பொள்ளாச்சியில் கடையடைப்பு...


பொள்ளாச்சியில் பாலியல் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யுமாறும் அவர்களுக்கு துணையாக இருக்கும் ஆளும்கட்சியை கண்டித்து  இன்று கடையடைப்பு மற்றும் மாலை 4 மணிக்கு காந்தி சிலையிலிருந்து கண்டனப் பேரணியும் நடைபெறுகிறது.

பொள்ளாச்சியில் இன்று காலை 6 மணி முதல் கடையடைப்பு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது நகரம் கிராமப்புறபகுதியில் 100 சதவீதம் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு உள்ளது.

ஆட்டோக்கள் ஓடவில்லை பேருந்துகளில் மக்கள் கூட்டம் குறைவாக உள்ளது இன்று பொள்ளாச்சியே வெறிச்சோடி காணப்படுகிறது இதை தொடர்ந்து மாலை 4 மணிக்கு காந்தி சிலையிலிருந்து கண்டனப் பேரணி புறப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.