03/03/2019

NOAH : வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


‘புராணக்கதைகளைப் பற்றி இப்போது ஏன் சிந்திக்க வேண்டும்? அவையெல்லாம் பழங்கால கட்டுக்கதைகள் தானே?’ என்று நாம் நினைக்கலாம். புராணங்களில் பெரும்பாலானவை கட்டுக்கதைகளின் அடிப்படையில் புனையப்பட்டிருந்தாலும், மற்றவை உண்மைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை.

இதற்கு உதாரணமாக, உலகளாவிய ஜலப்பிரளயத்தை, அதாவது பெருவெள்ளத்தை அடிப்படையாகக் கொண்ட அநேக புராணக்கதைகளையும் பழங்கதைகளையும் சொல்லலாம்.
பொதுவான இந்த சம்பவத்தின் நடவடிக்கையாக, கீழுள்ள கதைகளே உலகின் அனைத்து புராணங்களிலும் ஒருசில மாற்றத்துடன் கூறப்பட்டிருக்கும்.

பைபிளில் நோவாவின் ஜலப்பிரளயத்தில் எட்டு பேர் மட்டுமே தப்பிப்பிழைத்தார்கள் என்று கூறப்படுகிறது. ( முக்கியமாக: நோவா தனது பேழையில் நீர்வாழ் உயிரினங்களை ஏற்றியதாக எந்தவித குறிப்புகளும் இல்லை.) அதன் பின்னர் சுமார் 1,400 வருடங்களில் பூமியின் மக்கள் தொகை ஐந்து கோடியை எட்டியிருக்கலாமென மக்கள் தொகையியல் நிபுணர்கள் சிலர் ஊகிக்கிறார்கள். 8 பேரிலிருந்து 1,400 வருடங்களுக்குள்ளாக சுமார் ஐந்து கோடி பேராக அதிகரித்தது என்று கூறுவது நம்ப முடியாதது.
எனினும் இந்த நோவா வம்சத்தின் ஒரு கூறிப்பிட்ட சமூகம் இந்த பூமியில் வாழ்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

இது ஒருபுறமிருக்க, நவீன அறிவியலின் பரிணாமவியல் கொள்கைபடி: நீர்வாழ் உயிரினமான ஒருசெல் உயிரிலிருந்தே அனைத்துவித உயிரினங்களின் தோற்றம் உருவானதாக கூறப்படுகிறது. சார்லஸ் டார்வின் அவர் எழுதிய உயிரினத் தோற்றம் பற்றி படைப்பில் இவ்வாறு கூறுகிறார்.

“என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு உயிரினமும் தனித்தனியாக உருவாகவில்லை, உயிரினங்களின் ஒரு சிறு தொகுதியிலிருந்துதான் மற்ற எல்லா உயிரினங்களும் தோன்றின.” காலங்கள் செல்லச் செல்ல சாதாரண உயிரின வகைகள் என்று அழைக்கப்படுகிற, முதன்முதல் தோன்றிய இந்தச் “சிறு உயிரினத் தொகுதியில் சிறுசிறு மாற்றங்கள் நிகழ்ந்ததால்” கோடிக்கணக்கான வித்தியாசமான உயிரினங்கள் பூமியில் தோன்றின என்பதாக டார்வின் கூறினார்.

இந்தச் சிறிய மாற்றங்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து மீன்கள் ஊர்வனவாகவும், மனிதக் குரங்குகள் மனிதர்களாகவும் மாறுவதற்குத் தேவையான பெரிய மாற்றங்களை நிகழ்த்தின என்கிறார்கள் பரிணாமவாதிகள். இப்படி நடந்ததாகச் சொல்லப்படுகிற பெரிய மாற்றங்களை
“மேக்ரோ எவல்யூஷன்” என்று அழைக்கிறார்கள்.

இறுதியாக: பிரளய காலத்தில் தப்பிய உயிரினங்களான நோவாவின் சந்ததியினர் ஒருபுறம் பூமியில் வாழ்கிறார்கள். ஜலப்பிரளயத்தில் அழிக்க முடியாத, அறிவியல் பரிணாமவியல் கோட்பாடுகள் படி உருவான உயிரினங்கள் மறுபுறம் இந்த பூமியில் வாழ்கிறார்கள். இந்த இரண்டு கோட்பாடுகளும் ஏற்றுக்கொள்ளக் கூடியவைகளே. கேள்வி என்னவென்றால்
இவர்களில் யார் கடவுளின் தூயப்படைப்பு?

எனது கருத்து: ஜலப்பிரளயத்தில் தப்பிப்பிழைத்தவர்களில் இருந்து ஆரம்பமான உலக ஜனத்தொகை இன்று 700 கோடியையும் தாண்டியிருக்கிறது என்பது நம்புவதற்கு கொஞ்சம் கடினமானது.

அதாவது பூமியில் உள்ள தேவைகளின் நிமித்தமாக, இந்த அதிகப்படியான மனித இனம் உருவாக்க மனிதர்களை படைத்தது . வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்த #வேற்றுக்கிரகவாசிகளே என்பதே அது.

இது இப்போதைய மனித சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் என்றாலும் உண்மை இதுவே என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பல அதிகார மட்டங்களும் இந்த உண்மைகள் வெளி வருவதனை தடுக்கின்றன . காரணம் உலகத்தில் இதனால் பல குழப்பங்களும் , கட்டுப்பாடற்ற தன்மையும் ஏற்படும் என்பதால் எனக் கூறப்படுகின்றது.

பண்டைய காலங்களில் பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் வந்ததற்கான ஆதாரங்கள். அவர்களின் படைப்பினங்கள் மூலமாக பூமி முழுவதும் சாட்சிகள் உள்ளன . அப்படி என்றால் அவர்கள் ஏன் வந்தார்கள் ? பூமியில் அவர்களுக்கு என்ன தேவை இருந்தது ? மனிதர்களை எப்படி உருவாக்கினார்கள் ? இப்போது அவர்கள் எங்கே ? மதங்கள் ஏன் உருவாக்கப்பட்டன ? அவர்களை பற்றிய தேடலின் மூலமே இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.