21/07/2020

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 25 வயது மருத்துவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை...



சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 25வயது மருத்துவர் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளது, மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

முதலாம் ஆண்டு எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை முதுநிலை மருத்துவ மாணவர் கண்ணன், காலை 5 மணியளவில் ஸ்டான்லி மருத்துவமனைக் கட்டிடத்தில் இருந்து குதித்து  தற்கொலை செய்துகொண்டார்.

பணிச்சுமை காரணமாக தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என மருத்துவத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. நேற்று இரவு வரையிலும் கொரோனா வார்டு பணியைக் கவனித்திருக்கிறார். தற்கொலை குறித்து ஏழு கிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதலாம் ஆண்டு எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை முதுநிலை மருத்துவ மாணவர் கண்ணன், தற்கொலை குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும்,மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் நலனின் அக்கறை செலுத்த வேண்டும் பணிச்சுமையை குறைத்து மன அழுத்தம் இல்லாமல் மருத்துவர்களை கவனிக்க வேண்டும் என மருத்துவர் ரவீந்திரநாத் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.