23/07/2020

சாத்தான்குளம் வழக்கை விசாரிப்பதில் சிக்கல் - சிபிஐ குழுவில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு...



சாத்தான்குளம் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ குழுவில், உதவி ஆய்வாளர் சச்சின், காவலர் சைலேந்திர குமார் என்பவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மேற்கொண்டு வழக்கை விசாரிப்பதில் சிக்கல் நிலவுகிறது. நாளை மாலை 4 மணிக்கு 3 காவலர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ள நிலையில் 2 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

சாத்தான்குளம் வழக்கில் காவலில் எடுத்த 3 காவலர்களிடம் சிபிஐ விசாரணையை முடித்தது. 23ம் தேதி வரை அவகாசம் உள்ள நிலையில் இன்றே நீதிமன்றத்தில் 3 பேரையும் ஆஜர்படுத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. வெயில்முத்து, சாமதுரை, செல்லதுரை ஆகியோரின் வாக்குமூலங்களை சிபிஐ பதிவு செய்தது. 3 பேரின் வாக்குமூலங்களை ஆவணப்படுத்தும் நடவடிக்கைகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மேற்கொண்டு வழக்கை விசாரிப்பதில் சிக்கல் நிலவுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.