25/07/2020

தூத்துக்குடி : சுங்க அதிகாரிகள் 5 பேருக்கு கொரோனா, - ஏற்றுமதி இறக்குமதி பாதிப்பு...



தூத்துக்குடி சுங்கத்துறை அலுவலகத்தில் சுங்க உதவி ஆணையர் உட்பட ஐந்து அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்குகள் செல்வதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்றும், இன்றும் சுங்க முகவர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் அலுவலகத்தில் அனுமதிக்காமல் கதவு பூட்டப்பட்டது, அலுவலகத்திற்க்கு வந்த அனைவரும் வெளியே ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.

அதிகாரிகள் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டதுடன், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.