05/08/2020

இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - வாகன ஒட்டுநர்கள் கோரிக்கை...



"இ-பாஸ் முறையை ரத்து செய்து, தமிழகம் முழுவதும் வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டும்" என டூரிஸ்ட் வேன், கார் ஓட்டுநர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட டூரிஸ்ட் வேன், கார் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ரவிகுமார் தலைமையில் டிரைவர்கள் சுமார் 100 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், "கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளதால் எங்களது வாழ்வாதரம் பாதிக்கபபட்டுள்ளது. எனவே, மாதம் ரூ.5ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

 இ-பாஸ் முறையை ரத்து செய்து தமிழகம் முழுவதும் வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டும். தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கிய வாகன கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.