21/09/2020

கார்ப்பரேட்களின் கை ஓங்கும் - மக்கள் விரோத பாஜக மோடியின் 3 மசோதாக்கள் குறித்து விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?

 


கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே இந்த மசோதாக்கள் கொண்டு வரப்படுவதாகவும் இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் எனவும் அச்சம் எழுந்துள்ளது.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண்மை தொடர்பான மூன்று மசோதாக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, மத்திய உணவு பதினீட்டுத்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விவசாயிகள் மத்தியில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளின் நலன்களுக்காகவே கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால், இது விவசாயிகளை கடுமையாகப் பாதிக்கக்கூடியதென மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சிரோன்மணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கண்டனம் தெரிவிக்கிறார்.

இன்றியமையாப் பொருள்கள் திருத்த மசோதா, வேளாண் விளைபொருள் வணிகம் ஊக்குவிப்பு மசோதா, ஒப்பந்த பண்ணைய மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை தற்போது மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே இந்த மசோதாக்கள் கொண்டு வரப்படுவதாகவும் இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் எனவும் அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வால், அங்கு போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில்தான் விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக, இச்சட்டத்தை எதிர்த்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார், பஞ்சாபை சேர்ந்த மத்திய அமைச்சர்

இன்றியமையா பொருள்கள்' என்ற பட்டியலிலிருந்து உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், உணவு எண்ணெய் வகைகள், வெங்காயம், உருளைக்கிழங்கு உட்பட இன்னும் பல விளைபொருள்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இனிவரும் காலங்களில், விவசாயிகளின் விளைபொருள்களை அரசு கொள்முதல் செய்யாது. குறைந்தபட்ச ஆதார விலையும் இனி நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பில்லை. இதனால் தனியார் நிறுவனங்களின் கோரப்பிடியில் விவசாயிகள் சிக்கி தவிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது. `வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு சட்ட'த்தின் மூலமாக, கார்ப்பரேட் நிறுவனங்கள், வேளாண் சந்தையை முழுமையாக ஆக்கிரமிப்பதற்கான ஆபத்தும் உருவாகியுள்ளது. மூன்றாவதாக, `பண்ணை சேவைகள் ஒப்பந்த அவசர மசோதா' என்ற பெயரில் ஒப்பந்தப் பண்ணையச் சட்டமும் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மசோதாக்களுமே விவசாயிகளின் கழுத்தை நெரிக்கக்கூடியது.

அரிசி, கோதுமை உள்ளிட்டவை, அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால்தான், இவை அரசு கொள்முதல் செய்து வந்தது. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணம் செய்யப்பட்டதால்தான், தனியார் வியாபாரிகள், இந்த விலைக்கு கீழ், விலையைக் குறைக்க முடியாத பாதுகாப்பு இருந்து வந்தது. ஆனால், இனி அப்படியிருக்காது. தனியார் வியாபாரிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் சொல்லக்கூடிய விலைக்கு விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிவிடும். விவசாயிகள், தாங்கள் விரும்பும் வணிகர்களிடமும், வணிக நிறுவனங்களிடமும் தங்கள் விளைபொருள்களைப் பேரம் பேசி இலாப விலைக்கு விற்றுக் கொள்ளலாம் என அரசு கூறுகிறது, இது சாத்தியமே இல்லை. பெரும்பாலான விவசாயிகள், சிறு, குறு ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள். இவர்கள் கடன் வாங்கி சாகுபடி செய்பவர்கள். இன்னொருபுறம், விளைவித்த விளைபொருள்களை பாதுகாப்பாக சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்றுக் கொள்ளும் அளவுக்கு, சேமிப்புக் கிடங்கு வசதிகள் நம் விவசாயிகளிடம் இல்லை. கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியையும் சமாளிக்க வேண்டும்.

இதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் கேட்கும் விலைக்குத் தங்கள் விளைபொருள்களை விற்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள்” 

உணவுப் பொருள்களின் பதுக்கலை தடுக்கத்தான், அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் இவை இடம்பெற்றிருந்தன. வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டபோது, நாட்டில் எங்கெல்லாம் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ, அவற்றை அரசு பறிமுதல் செய்து, பொதுமக்களுக்கு நியாமான விலையில் வழங்கியது.

இனி அதுபோல் பறிமுதல் செய்ய முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்களும் தனியார் வியாபாரிகளும் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து, பதுக்கி வைத்து, வேண்டுமென்றே தட்டுப்பாட்டை உருவாக்கி, கொள்ளை லாபம் பார்ப்பார்கள். விளைபொருள்களை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்ல இனி எந்தவிதக் கட்டுப்பாடுகளும் கிடையாது. பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளைப்பொருள்களைப் பெரும்பாலும் அரசின் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களின் மூலமாகவே விற்பனை செய்தார்கள். குறைந்தபட்ச ஆதார விலைக்கு மேல்தான் வியாபாரிகள் ஏலம் கேட்க முடியும். ஆனால், இனி தனியார் நிறுவனங்கள், தங்கள் விருப்பம் போல் சந்தைகளை உருவாக்கி, விவசாயிகளின் வயிற்றில் அடிக்க வாய்ப்புகள் அதிகம்.

இந்த முக்கிய அவசரச் சட்ட மசோதாக்களைப் பற்றி குறிப்பிட வேண்டுமென்றால்,

மின்சார திருத்த மசோதா 2020: தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் இலவச மின்சாரம் நடைமுறையில் இருக்கிறது. புதிய சட்டத்தால் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் மின்சாரத்துக்குக் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே விலையை நிர்ணயிக்கும். அதனால், விவசாயம் மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு அதிகமான தொகை செலுத்த நேரிடும். 

இந்த இலவச மின்சாரத்தைப் பிடுங்குவதால் விவசாயிகள் மாதம் ரூ.2,000 முதல் 5,000 வரை கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏற்கெனவே அதலபாதாளத்தில் இருக்கும் விவசாயம், மேலும் நலிவடையும்.

இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் நிலத்தை விற்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.