10/09/2020

இன்னும் எத்தனை பேரை காவு வாங்கும் இந்த நீட் தேர்வு...


அரியலூர் அருகே எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த மாணவன் விக்னேஷ் கிணற்றில் குதித்து தற்கொலை...

வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்விற்கு தயாராகி வந்த நிலையில் மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்..

நீட் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் விக்னேஷ் 19. என்பவர் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மன உளைச்சலில் இருந்த அவர், தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வு விவாகரத்தினால்தான் தற்கொலை செய்துகொண்டார். இப்போது அதே மாவட்டத்தில் மாணவர் ஒருவர் நீர் தேர்வினால் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.