15/09/2020

Godliness is the state of Blissfulness...



நீ கேட்பவன் இல்லை..

கொடுக்கப் பிறவி எடுத்து பிறந்தவன்..

நம்மிடம் நிறைய கொடுப்பதற்கு இருக்கிறது..

கேட்டுப் பெற வேண்டியது ஒன்றும் இல்லை..

நமக்குள் பேரானந்த நிலை இருக்கிறது  என்பதை தெரியாததனால்..

அதை உணராததால் தான் பிறரிடம் அன்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்..

இறைவனிடம் பிரார்த்தனை என்ற பெயரில்..

கை ஏந்திக் கொண்டும் இருக்கிறோம்..

நம்மில் இருக்கும் அன்பை உணர்ந்தால்..

நம்மை நோக்கி வரும் அன்பின் அலைகளை உணர முடியும்..

இறைவனிடம் கையை ஏந்தி கேட்டால் இறைவனை அவமானப் படுத்துகிறோம் என்பதை...

ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தாலும் அதுவே நிதசர்ணமான உண்மை...

நாம் கேட்காமலே இறைவன் எவ்வளோ கொடுத்து அருளி இருக்கிறான்...

சுவாசிக்க காற்று,

குடிக்க நீர்,

வசதியாகவும், ரசித்து அனுபவிக்கவும் நிலம் என்னும் மடியை ஆழ, அகல விரித்திருக்கிறது..

உயிர் ஜெனிக்க வெப்பம்,

அதை குளிர்விக்க குளிர்ச்சியான காற்று,

மனதுக்கு இதம் அளிக்கும் இயற்கை வளங்கள்??

இப்படி எத்தனை எத்தனையோ...

இன்னும்

நாம் அன்றாடம் இந்த பூமியில் சுவாசித்துக் கொண்டு..

அனைத்து சுக போகங்களையும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம் என்பது..

எத்தனை பெரிய ஆசீர்வாதம் என்று நினைத்துப் பார்த்தால்..

நம் வாழ்வின் வசந்தத்திற்கு எதை கொண்டு ஈடு செய்ய முடியும்....

அதை எல்லாம் அனுபவிப்பதை விட்டு விட்டு,

மேலும் இயற்கை வளங்களை முடிந்தவரை அழித்தும் விட்டு..

நாம் இறைவனிடம் இன்னும் வேண்டும், வேண்டும் என்று பேரம் பேசி கொண்டிருக்கிறோம்..

இவைகள் அனைத்தையும் வாழ்வின் வளமாக மாற்றும் அறிவு மனிதனிடம் இருக்கிறது..

இயற்கையின் வளமே வாழ்வின் வளம்..

அன்பின் வளமே வாழ்வின் வசந்தம்..

அதை உணரச் செய்வோம்,

வாழ்வில் வளமும் நிறைவும் பெற்று வளமாக வாழ்வோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.