24/10/2020

என்னுடைய தியான முறைகள் ஆபத்தானவை தான்...

 


பார்க்கப் போனால் ஆபத்தில்லாத தியான முறைகளே இல்லை.

ஆபத்தில்லை என்றால் அவை தியான முறைகளே அல்ல.

அவை வெறும் வித்தைகள் தான்.

ஆமாம் ஆபத்தானவை தான். எனவே நுழையும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்துவிடு.

மாணவர்களாக என்னுடைய தியான முறைக்குள் நுழைந்து விடாதே. ஆபத்தாகிப் போகும்.

சீடனாக நுழைந்து பார்.

தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வறட்டு ஆர்வத்தோடு நுழைந்து விடாதே. அந்த ஆர்வம் எப்போதும் உன்னை ஆபத்திற்குத் தான் இட்டுப் போகும்.

உண்மையாகவே நீ தயார் என்றால் பேதலிப்பை எதிர்கொள்ள தயார் என்றால் நீ வரலாம்.

இல்லையேல் அப்படியே இருந்துவிடு..

ஆனால் நான் சொல்வதைச் சரியாகக் கவனிக்காவிட்டால் தான் தோற்றுப் போவாய். என்னை கவனித்து கேட்டால் தோற்றுப் போவது என்ற கேள்விக்கே இடமில்லை.

நான் சொல்வது எதுவும் பேச்சளவிலானது அல்ல. நான் சொல்வதெல்லாம் நான் செய்து பார்த்து விட்டவை.

அவற்றைக் கடந்து வந்திருக்கிறேன். எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பது எனக்குத் தெரியும்.

எது நடக்கும் எதில் தவறுகள் நடந்து போய் விடும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும்.

இந்தப் பிரதேசத்தின் ஒவ்வோர் அங்குலமும் எனக்குத் தெரிந்தது தான். எனவே ஏதாவது தவறு நேர்ந்து விட்டால் நீ சரியாகக் கவனிக்கவில்லை என்று தான் பொருள்.

நான் சொல்வதைக் கவனித்தால், என்னை நம்பினால் எதுவும் தவறாகிப் போகாது. அப்படித்தான் நம்பிக்கை, ஆழ்ந்த நம்பிக்கையும் சரணாகதியும் தேவை என்பது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.