04/11/2020

தமிழர் ஆன்மீக சைவ.. வைணவ அடிதளத்தை அழிக்கும் ஒப்பந்தம் 1967-இல் திமுக விற்குத் தரப்பட்டது...

இதற்காகவே அண்ணாத்துரை 1967-இல் வாத்தீகன் சென்று வந்தார்.

அதன் முதல் கட்ட நடவடிக்கையாக...

1) தமிழர் கோவிலில் தமிழ் ஓதுவார்கள் (தேவாரம், திருவாசகம் படிப்பவர்கள், ஒதுபவர்கள்) பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

2) இரண்டாம் கட்ட நடவடிக்கையாக, மணியக்காரர்களாக இருந்த (முக்கியமாக கணக்கப் பிள்ளை, அந்தணர், பறையர், கொங்குவேளாளக் கவுண்டர், முதலியார் உள்ளிட்ட நடமாடும் கணணிகள்) நீக்கப்பட்டனர்.

ஏன் என்றால், இவர்களுக்குக் கோவில் நிலங்கள், தானம் பெறப்பட்ட நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், அதில் உள்ள மரங்கள், விளைச்சல், வருவாய் குறித்த எல்லாம் அத்துப்படியாக ஞாபகத்தில் இருக்கும்.

இவற்றைத் தங்களது வாரிசுகளுக்கும் சொல்லிவிட்டுச் சென்றனர்.

காலை, மாலையில் நடக்கும் போதே நோட்டம் இடுவார்கள், யாரும் இடத்தை அபகரிக்கிறார்களா என்று.

இந்த மணியக்காரர்களை விரட்டினால் தானே ஏமாற்றுக்காரர்கள், கோயில் நிலத்தைப் பட்டா போட முடியும்?

3)சமஸ்கிருத  பிராமணர்களை எதிர்பதாக பொய் கதைகளை சொல்லி சமஸ்கிருத பிராமணர்கள் கையில் கோவில் நிர்வாகத்தை ஒப்படைத்து திராவிடியா அரசு.   இதன் மூலம் தேவாரம் திராவாசகம் பாடிய தமிழ் அந்தணர்கள் கோவில் பணியாளர்களாக  மாற்றப் பட்டார்கள்.

 4)தமிழ் சைவ வைணவ கோவில்களை மட்டும் அரசுடமைப்படுத்தி, இந்து_சமய அறநிலையத்துறை என நாடகம் ஆடி, அரசுப் பணி என்ற பெயரில், இந்து மத நம்பிக்கை இல்லாத கிறிஸ்தவர்களையும், கடவுள் நம்பிக்கை அறவே இல்லாத திராவிடர் கழகம், திமுக., கட்சிக்காரர்களையும் நியமித்து, ஒரு பக்கம் தமிழர் ஆன்மீகத்தை சீரழிப்பது. மறு பக்கள் கோவில் நகைகளை கோவில் இடங்களை கொள்ளை அடிப்பது என தமிழர் சொத்துக்களை சுரண்டி கொழுக்க ஆரம்பித்தது திராவிடியம் அதையே காஞ்சி மடம் தலமையில் இன்றைய சமஸ்கிருத பிராமணியம் செய்கின்றது.

5)கோவில் சிறப்பு நுழைவுச் சீட்டு என்று போட்டு, பக்திக்கு உள்ள இடத்தைக் கேளிக்கை இடமாக மாற்றியது.

6)  கோயிலுக்கு உள்ளேயே கடைகள், விடுதிகள், கட்டணக் கழிப்பறைகளை ஏற்படுத்தி, திமுக கொள்ளையர்கள் சம்பாதிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தது.

இப்படி, அமைதியைத் தேடி ஆன்மீகக் காரியங்களுக்காக பக்தர்கள் வரும் கோயில்களின் நிலைமாறி, அவற்றை வர்த்தக மையங்களாக மாற்றியது திராவிட (பெரும்பாலும்) திமுக., ஆட்சியாளர்களின் சாதனை.

இதன் மூலம் தமிழர் வரலாற்றை அழிப்பது தமிழர் தொன்மையை அழிப்பது  இதுதான் ராமசாமி நாய்க்கர்., அண்ணாத்துரை.,, கருணாநிதி உள்ளிட்ட 

திராவிடியா சதிகாரர்களின்  திட்டம் ஆக இருந்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.