23/11/2020

திராவிடம் எனும் பேரில் கன்னட பலிஜா ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் ஏமாற்று வேலைகள்...

இசுலாமியர் எங்களுக்கு எதிரி, இசுலாமியர் மலத்துக்கு சமம், இசுலாமியப் பெண்கள் உழைக்காதவர்கள் - ஈ.வே.ரா...

இசுலாமிய மதவெறியை எதிர்த்த (பிறப்பால் இசுலாமியர்) பாரூக் என்பவர் இசுலாமிய வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

அவர் திராவிட இயக்கத்தில் இருந்ததால் ஏதோ முற்போக்கு இசுலாமிய சிந்தனையாளருக்கு திராவிடம் ஆதரவு கொடுத்து வருவது போல ஒரு தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள்.

ஆனால் திராவிடத்தின் தந்தை ஈ.வே.ரா, இசுலாமியரையும் பிற சிறுபான்மை மக்களையும் எப்படி பார்த்தார் என்பதை இங்கே அறிந்து கொள்வது அவசியம்..

மூன்று சான்றுகளைத் தருகிறேன்...

1. பார்ப்பனர் = சாணி, இசுலாமியர் = மலம்.

பாப்பானுக்குப் பயந்து கொண்டு நாம் முஸ்லீம்களுக்கு இடம் கொடுத்து விட்டோம்.இது சாணியை மிதிக்க விரும்பாமல் மலத்தில் கால் வைத்தது போல் இருக்கிறது - 6.3.1962 விடுதலை தலையங்கத்தில் ஈ.வே.ரா..

2. மைனாரிட்டிகளான பார்ப்பனர், முஸ்லீம் ஆகியவர்களுக்கு அந்நிய ஆட்சியும், காங்கிரசும் காட்டி வந்த சலுகைகளாலும்,

தனி நீதி போன்ற காரணத்தினாலும், மேலும் அவர்களது ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்ததனாலும்,நாடு வளர்ச்சி அடையாமலும், மெஜாரிட்டி மக்கள் மனிதத் தன்மை பெறாமலுமே போய் விட்டார்கள்..

குறிப்பாகத் தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்.

இதற்கு உதாரணம், இந்த நாட்டில் இன்று மைனாரிட்டியாக உள்ள சமுதாயத்திற்கு இருந்து வரும் வசதியும், ஆதிக்கமும், நடப்பு வசதியுமேயாகும்.

அதாவது 100-க்கு 90 விகிதம் உள்ள இந்நாட்டுப் பெருவாரி சமுதாய பெண்கள் நாற்று களை பிடிங்கி, ரோட்டில் கல் உடைத்து, வீதியில் மக்கள் நடக்க மண் சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம் பெண்கள் உடலுமைப்பு வேலைகள் எதுவும் செய்யாமல்..பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில் உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் சொகுசாக அனுபவிக்கிறார்கள் - ஈவெரா (விடுதலை 6.3.1962)..

3. ஈ.வே.ரா தானே வெளியிட்ட அவரது 85வது பிறந்தநாள் விழா மலரில் (17.09.1963) எழுதியதைப் பாருங்கள்..

1.பார்ப்பனர்கள்

2.நம்மில் கீழ்த்தர மக்கள்

3.முஸ்லீம்கள்

4.கிறித்துவர்கள்

ஆக இன்று நமக்கு சமுதாய எதிரிகளாக இந்த நான்கு கூட்டங்கள் இருக்கின்றன..

அதாவது பிராமணரல்லாத சாதியாருக்கு பார்ப்பனர்களைப் போல கிறித்துவரும் இசுலாமியரும் கீழ்த்தர மக்களும் (தாழ்த்தப்பட்டோரும்) எதிரிகளாம்.

இவரா சிறுபான்மைக் காவலன்?

85 வயது வரை திருந்தாத ஒரு ஆளை பின்பற்றும் இயக்கங்களா இசுலாமியருக்கு காவல்..?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.