08/11/2020

கொரோனா : இந்தியர்களுக்கு சீனா தடை...

 


இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பயணிகள் வர சீன அரசு தடை விதித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும் இருக்கின்றன. எனினும், சீனாவில் தற்போது கொரோனா கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பை சுட்டிக்காட்டி இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பயணிக்கவும், இந்திய விமானங்களுக்கும் சீன அரசு தடை விதித்துள்ளது. சீன விசா, ரெசிடன்ஸ் பெர்மிட் போன்ற ஆவணங்களை வைத்திருப்போரும் இந்தியாவில் இருந்து சீனா வர அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் இருந்து சீனாவுக்கு பயணிப்போருக்கு விசா மற்றும் ரெசிடன்ஸ் பெர்மிட் வழங்க அனுமதிக்கக்கூடாது என்று இந்தியாவிலுள்ள சீன தூதரகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த தடை தற்காலிகமானது எனவும், கொரோனா பாதிப்பு மாற்றத்திற்கு ஏற்ப அடுத்தகட்ட அறிவிப்பை சீனா வெளியிடும் எனவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு மிகுதியாக இருக்கும் வேறு சில நாடுகளுக்கும் சீனா தடை விதித்துள்ளது.

இதுபோக, பிரிட்டன், பெல்ஜியம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து சீனர் அல்லாத நபர்கள் சீனாவுக்குள் நுழையவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தடை விதித்துள்ளது. மேலும், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வருவோர் உடல்நிலை பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.