20/12/2020

இந்திய ஒன்றியத்தின் அதிகார வர்க்கங்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் விவசாயிகள் இப்படி வந்து டெல்லியை முடக்குவார்கள் என்று...

அதிலும் குறிப்பாக சீக்கியர்களால் பாசக அரசு இந்த நிலைக்குத் தள்ளப்பட்டது தான் சிறப்பான சம்பவம்...

போராட்டக்காரர்கள் இசுலாமியர்களாக இருந்திருப்பார்களேயானால் சங்கிகளின் அரசுக்கு சொல்லவே வேண்டாம் தீவிரவாதிகளை கைகாட்டி இந்நேரம் இதே சீக்கிய இராணுவத்தை வைத்து ஒடுக்கியிருப்பார்கள்...

இப்போது போராடுகிற சீக்கிய விவசாயிகள் மீது கை வைத்தால் என்ன விளைவுகள் சந்திக்க நேரிடும் என்று சங்கிகளுக்கு பெரும் மண்டை வலி...

ஒரே தேசம் ஒரே நாடு என்கிற முழக்கமெல்லாம் இந்திய ஒன்றியத்தின் தேசிய இனங்களின் அழிப்புக்கு பிறகே சாத்தியப்படலாம்...

அதற்கு முன் இந்திய ஒன்றியத்தின் நிலப்பரப்பு பல தேசங்களாயிருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.