09/01/2021

குல தெய்வ கோயிலில் பலியை நிறுத்தினால் சர்வ நாசம்...

சிவ ஆகமங்களில் சிவபெருமான் கூறும் அம்பாள் உபதேசித்த யாமளம், மாத்ரு தந்திரம் பலி பூஜை முறைகள் என்ன ?

திருமூலர் திருமந்திரத்தில் சிவாகமத்தோடு சேர்த்துக் கூறப்படும் யாமள ஆகமத்தில் அம்பாள் சிவபெருமானிடம் என்ன பேசுகிறார் ?

அனைத்து தெய்வங்களுக்கும் ஏதோ ஒருவித பலி கொடுக்கும் வழக்கம் உள்ளது. இதற்காகதான் எல்லா கோயில்களிலும் பலி பீடம் அமைக்கப்பட்டு உள்ளது. 

தமிழ் சங்க இலக்கியத்தில் இயக்கி என்ற தேவதைக்கு பூவை பலியாக போடுவது என்றும்,bசிவன், பெருமாள் கோயில்களில் ஒரு பிடி சுத்த அன்னத்தை பலி பீடத்தில் பலியாக வைக்கும் வழக்கமும் உள்ளன.

இது அன்ன பலி.

இதே போல பூத சக்திகளுக்கும் பலிகள் உண்டு. சேவல், ஆட்டுக்கிடா, பன்றி, பனங்கள், சாராயம், கஞ்சா என்பதில் ஏதோ சிலவற்றை பலியாக கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

உதாரணத்திற்கு பாசூர் மடாதிபதி, கர்மாபுரம் மடாதிபதி போன்ற நாடார்களின் குல குரு மடங்களின் முறையே யஜுர் வேதம், போதாயன சூத்திரத்தை கடைபிடிக்கின்றனர்.

பாசூர் சோழிய வைதீக பிராமணர், கர்மாபுரம் ஆதி சைவர் இவர்கள் மடத்தை சேர்ந்த கருப்பு தேவதைகளுக்கு பிராமணர்களான இவர்களே சிஷ்யர்களான தங்கள் ஊர்களுக்கு சஞ்சாரம் கிளம்பும் முன் அந்தந்த தேவதைக்கான பலிகளை கொடுத்து வணங்கி விட்டுதான் செல்வது நம் பாரம்பரிய வழக்கம்.

பாசூர் மடத்தில் உள்ள சங்கிலி கருப்பண்ணன் தெய்வத்திற்கு முப்பூசை என்ற சேவல், ஆட்டுக்கிடா, பன்றி, கஞ்சா, சாராயம்  ஆகியவற்றை மடாதிபதி கொடுப்பார்.

பூசாரியான பண்டாரம் அவற்றிற்கு தீர்த்தம் போட்ட உடன் மடாதிபதியை வணங்கிச் சென்று விடுவார். பலி கொடுத்து பூசாரிகளும்,அசைவம் உண்ணும் பக்தர்களும் பிரித்து கூறு போட்டுக் கொள்வார்கள்.

யாகங்களிலும் பாக யக்ஞம் என்ற ரத்தம்,மாமிசம் போடும் யாகங்களும் உண்டு. 

வேதம்,மனு நீதி, வேதாந்த ப்ரம்ம சூத்திரம் , ஆகமம் ஆகியவை இப்படி தேவதைகளுக்கு கொடுக்கப்படும் 

பலிகளை அசுத்தம் என்று சொல்லக் கூடாது என்கின்றன. பலியாகும் ஆன்மாக்கள் அந்தந்த தேவதைகளை அடைகின்றன என்கின்றன. 

பிராமணர்கள் அசைவம்,போதை ஆகியவற்றை உண்ணக் கூடாது என்ற அகத்தியர், சுக்ராச்சாரியார் ஆகியோரது சாபங்களை காரணமாக காட்டி, பிராமணர்கள் உண்ண மட்டும்தான் கூடாது, பலி கொடுப்பதை கொடுத்து தான் ஆக வேண்டும் என்பதை தங்கள் சமண போலி அஹிம்சை போலவே மாற்றுகின்றனர் சாக்கிய இலுமினாட்டிகள்.

மறுபுறம் பிராமணர்களுக்கும், கிராம தெய்வங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று சிறு தெய்வ வழிபாடு என்று புதுப் பிரச்சார சாக்கிய திராவிட பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர்.

கும்பகோணம் காஞ்சி போலி சங்கர மடம் மூலமாக சரபோஜி, அபிராமப்பட்டர் என்ற போலிக் கதை கிழக்கிந்திய பிரீமேசன் இலுமினாட்டி கம்பெனியால் உருவாக்கப்பட்டது. திருக்கடையூர் அபிராமி அம்மன் கலியுகத்தில்தான் சிறு தெய்வங்கள் என்ற தேவதைகளே தோன்றியதாகவும், அவைதான் பலிகள் கேட்டதாகவும் அம்மன் சொல்வது போல அபிராமி பட்டர் புரூடா விடுகிறார்.

ஆரிய திராவிட பிரிவினையின் பெருந்தெய்வம், சிறு தெய்வம் எனும் பிரிக்கும் சூழ்ச்சி இங்குதான் தொடங்கப்பட்டது.

இன்னொரு புறம் பலி கொடுக்காமலேயே அசைவம்,போதை ஆகியவற்றை இன்பத்திற்காக நினைத்த போது எல்லாம் உண்ணலாம் என்று தங்கள் சீமைக் கோழி, சீமைச் சாராயம், சீமை சுருட்டு ஆகியவற்றை விற்பதற்காக கசாப்பு கடை, டாஸ்மாக் என்று புதுப்பாணிகளை புகுத்துகின்றனர்.

ஆடு,கோழி பலியை கோயில்களில் நிறுத்த பன்னாட்டு PETA வின் சதி மட்டும் அல்ல. பழமையை அழிக்கும் மெகா சதியும் கூட...

திருக்கோவில்களில் முன்னோர்களால் இறைவனுக்கு கட்டப்பட்ட பலி பீடம் மரபு எந்தெந்த கோயில்களில் எப்படி இருந்ததோ அப்படி தொடர்ந்து கடை பிடிக்கப் பட வேண்டும்.

எல்லா தெய்வங்களும் நம்மை விட பெரிய தெய்வம்தான். அதனால் தான் அது தெய்வம்.

சிவபெருமான் உபதேசித்த ஆகமங்களில் இறைவனே கூறும் உப ஆகமங்களான யாமளம், மாத்ரு தந்திரங்கள் திருமூலரால் திருமந்திரத்தில் ஒன்பது சிவாகமங்களோடு சேர்த்தே கூறப்படுகிறது.

அபிராம பட்டர் பெரியவரா?

சிவபெருமானும்,திருமூலரும் சொல்லும் யாமள, மாத்ரு தந்திர ஆகமங்கள் பெரிதா என்று குட்டிக் குழந்தை கூட சொல்லி விடும்.

ஆகமங்களின் படி பூஜை செய்யதான் அபிராம பட்டரே தவிர அபிராம பட்டர், மராட்டிய இலுமினாட்டி எடுபிடி சரபோஜி, கிழக்கிந்திய கம்பெனி நினைத்த படி எல்லாம் ஆகமங்களை மாற்றவே முடியாது.

குலத்தோடு சேர்ந்து ஒன்றாக நாம்  செய்யும் இந்த வழிபாட்டு முறைக்கு கால மார்க்கம் என்று பெயர்.

இது அல்லாமல் தனி மனிதனாக செய்யும் சாக்த முறைக்கு வித்யா உபாசனைகள் என்று பெயர். 

கௌல மார்க்கம் தங்கள் இனத்தோடு சேர்ந்து செய்வது.

வித்யா உபாசனை என்பது தனி மனிதனாக செய்வது.

இவை இரண்டையும் குழப்பி உங்கள் உங்கள் முன்னோர்கள் செய்த மரபை குழப்புபவர்கள் சர்வ நாசம் ஆகி விடுவார்கள்.

இது அம்பாளே யாமள மாத்ரு தந்திரந்தில் சொல்வது.

ஜாக்கிரதை.

அனைத்து யாகள ஆகமங்களிலும் பஞ்ச மகார யக்ஞம் எனும் பலி பூஜைகள் சக்தி தேவியான அம்பாளால் குறிப்பிடப்பட்டு உள்ளன.

இந்த யாமள மாத்ரு தந்திர ஆகமங்கள் சிவபெருமான் கூட இல்லாமல் அம்பாளே காளி போன்ற சுதந்திர சக்தியாகவும்,பிரதான தெய்வமாகவும் உள்ள கோயில்களில் கடைபிடிக்கப்படுவது ஆகும்.

இவற்றில் ஆதி சைவர்கள் கும்பாபிஷேகம் முதலிய கிரியைகளை மட்டுமே செய்யலாம்.

தினசரி நடத்தும் நித்திய பூஜைகளை சூத்திர்ர்களான ஆண்டி,பண்டாரம் போன்றோர் மட்டுமே செய்ய வேண்டும் என்று சிவ ஆகமம், யாமள ஆகமம், பாஞ்ராத்திர பாஸ்ம சம்ஹிதை போன்றவற்றில் இறைவனே கூறுகிறார்.

உதாரணத்திற்கு ருத்ர யாமளத்தில் உத்தர தந்திரத்தில் பஞ்ச மகார பூஜா என்று அம்பாளே உபதேசிக்கிறாள்.

இந்த ஐந்து மகாரங்கள்...

1. பலி மாமிசம்

2. பலி மத்யம் அல்லது சுரா பானம் அதாவது பட்டை சாராயம்,கஞ்சா,கள் போன்றவை

3. பலி மத்ஸ்யம் அல்லது மீன் பலி

4. பலி முத்ரா எனும் அரிசி வகைகளில் செய்யப்படும் பொங்கல்,அவல்,பச்சை மாவு போற்றவை

5. மைதுணம் என்ற கணவன் மனைவி இணைந்து தங்கள் பங்காளிகள் மற்றும் குலத்தினரோடு சேர்ந்து மட்டுமே மேற்கண்ட 4 பூஜைகளையும் செய்வது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWTaxEZ2BpdDHvk7qlvOBG4M18T23DxigxuY3HpQVnyqpMVdpnE922SQ1QOi0RUeeGAbGssYdi8C4dOosN-50mLggrtaocW8cmmK-RtGISNiANW3Y8HDxHWP2ujVgTKDFUS9DXGwFMCyYu/s1600/IMG_20160121_091807523.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk0XiDFRqPMUT_whaCGspl0VmEnr9pLNJOF_3bn11G4qBfKh2uE3MKQw1S9DWiO-yzxbhySJBPO-DrNMmjB7nfZsOA_FHFW3ULZAlml7a2yK-Mle8Wpy8JAVYwaKk7bSATa-vn9Hys-eBj/s1600/IMG_20160121_091816184.jpg

https://kvnthirumoolar.com/song-63/

https://blog.scribblers.in/2013/04/24/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/

சுருங்கச் சொன்னால் நம்ம ஊரில் உள்ள கோயிலில் பங்காளிகள் உடன் சேர்ந்து செய்யும் பலி பூஜை இட்டு,பொங்கல் வைத்து செய்யும் பூஜை முறைகள் அனைத்துமே அம்மன் நமக்கு அளித்த யாமள மாத்ரு தந்திர ஆகமத்தில் உபதேசிக்கப்பட்டவை ஆகும்.

இதை தவிர்த்து விட்டு பூஜைகள் எத்தனை எத்தனை செய்தாலும் நமது குலம் விருத்தி அடையவே அடையாது.

சுரா சக்தி: சிவோ மாம்ஸம் தத் பக்தோ பைரவ ஸ்வயம்

இப்படி பஞ்ச மகார பூஜை செய்யும் போது அம்மனே பலி சுரா பானமாகவும், சிவனே மாமிசம் ஆகி விடுவதால் பக்தன் பைரவ நிலையில் அமர்கிறான்.

என்று ருத்ர யாமளம் பஞ்ச மகார பூஜா படலத்தில் 131 வது ஸ்லோகத்தில் பைரவி பைரவியிடம் கூறுகிறாள்.

இதைதான் ஜக்கி வாசுதேவ் திருடி லிங்க பைரவி என்று பௌத்த முறைப்படி சூனிய முட்டை வடிவில் மாற்றி உங்களையே கட்டிப் போடுகிறான்.

இதை செய்தவர் குடும்பம் சர்வ நாசம் ஆவதும் சத்தியம்.

மக்கா... பலி கொடுக்காட்டி குடும்பம்  சர்வ நாசம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.