19/03/2021

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி திமுக வேட்பாளரும், இளைஞரணி தலைவருமான திரு. எஸ். உதயநிதி வேட்பு மனு தாக்கலின் போது சமர்பித்த affidavit விவரங்களை பார்த்தேன்...

 


உதயநிதி சமர்ப்பித்ததில் அவருடைய வருவாய்...

ரூ. 1,50,17,700 (2017-18) 

ரூ. 4,00,090 (2018-19) 

ரூ. 4,89,520 (2019-20) 

என்று சொல்லப்பட்டு இருக்கிறது. 

இப்போது சில கேள்விகள்...

1 ) அரசியலுக்கு வருவதற்கு முன்பு (pre 2018) உதயநிதி சொன்னது சொந்தப்பணத்தில் தன்னை ஹீரோவாக்கி கொள்ள நடிக்கவில்லை, அப்படி என்றால் இன்றைக்கு வரைக்கும் நான் சொந்த காசில் தான் ஹீரோவாக நடித்திருக்க வேண்டும், தான் இப்போது வெளி நிறுவனங்களின் படங்களில் நாயகனாக நடிக்கிறேன் என்பதே. சொந்த பணம் என்று அவர் சொன்னது “ரெட் ஜெயண்ட் மூவிஸை” என்று வைத்து கொண்டால், ரெட் ஜெயண்ட் மூவிஸிற்கான source of income எங்கிருந்து வந்தது ? இல்லை அதுவும் மதுரை அன்புச்செழியன், செளகார்பேட்டை சேட்டுகள் போன்ற ஃபைனான்சியர்களுக்கு வட்டி கட்டி வாங்கிய பணமா ?

2 ) வெளிப்படங்களில் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தன்னை நாயகனாக்கி நடிக்க வைத்தார்கள் என்பது தான் உதயநிதியின் பார்வை. 2017 -18 காலகட்டங்களில் அவர் 5 படங்கள் நடித்தார் (அத்தனையும் அட்டர் ப்ளாப் என்பது தனிக்கதை.) அதன் பின்பும் போன வருடம் வந்த “சைக்கோ” வரைக்கும் பெரும்பாலும் வெளிப்படங்கள் தான். வெளிப்படங்களில் நடிக்கும் போது உதயநிதி சம்பளமாக வெறும் ரூ. 33,000+ தான் மாதத்திற்கு பெற்று கொண்டாரா ? இல்லை, தமிழ் சினிமாவை உய்விக்க வேண்டி, இலவசமாக நடித்து கொடுத்தாரா ?

3 ) ரெட் ஜெயிண்ட் மூவிஸாவது ஒரு நிறுவனம். அதன் இலாப, நட்டங்கள், வரவு, செலவுகள் என்பவை நிறுவனத்தினை சாரும். ஆனால் ஒரு நடிகர் என்பவரின் வருவாய் என்பது தனிப்பட்ட வருவாய் தான். அதை எந்த நிறுவனத்தின் கணக்கிலும் எழுத முடியாது. தமிழ் சினிமாவில் இரண்டு சீன்களில் வந்தாலும், டயலாக் இருந்து பேசி நடிக்கும் துணை நடிகர்களின் சம்பளமே குறைந்தபட்சம் 30,000ரூ. இதை கோடம்பாக்கத்தில் யாரை கேட்டாலும் சொல்வார்கள். ஆனால் கதாநாயகனாக தொடர்ச்சியாக நடித்த ஒருவரின் கடந்த இரண்டு வருட வருவாய் என்பது துணை நடிகர்களின் சம்பளத்தினை விட குறைவாக இருக்குமா ?

4 ) வெளிப்படங்களில் தன்னை ஹீரோவாக போடுகிறார்கள் என்று உதயநிதி சொன்னதே தானொரு தொழில்முறை நடிகன், தன்னை நம்பி பணம் முதலீடு செய்கிறார்கள், அந்த முதலீடு இலாபம் ஈட்ட கூடியது என்று தயாரிப்பாளர்கள் நம்பி தான் செய்கிறார்கள் என்பது தான். ஒரு தொழில்முறை நடிகனின் வருவாய் என்பது இவ்வளவு தானா ? (அ) கணக்கில் இவ்வளவு பெற்று கொண்டு மீத வருவாயினை உதயநிதி கருப்புப் பணமாக பெற்று கொண்டாரா ?

Representation of People's Act, 1951 (RPA) என்பது தேர்தலில் பங்கு பெறும் வேட்பாளர்களின் நடத்தை சார்ந்தது. அதில் Section 33, Rule 4A of the Conduct of the Election Rules தெளிவாக சொல்வது..

“all candidates contesting national/state assembly elections to furnish an affidavit comprising basic information such as their assets, liabilities, educational qualifications and criminal antecedents (if any). Failure to furnish information or filing false information in the affidavit is a penal offence under Section 125A of the RPA which prescribes a penalty of maximum six months or fine or both”

அதே சட்டத்தின் Section 8A சொல்வது "any candidate found guilty of corrupt practice from contesting the election." Non-disclosure of information has been interpreted as a "corrupt practice" amounting to disqualification. 

Section 123 of the RPA defines “Corrupt Practices” to include “bribery”, “undue influence”, appealing to vote or not on grounds of caste, religion etc. 

சரியான  தகவல்களை தராமல் போவதும் (failure to furnish information) தவறான தகவல்களை தருவதும் (filing false information), தரப்பட வேண்டிய தகவல்களை தராமல் மறைப்பதும் (Non disclosure of information) தேர்தல் விதிமுறைகளின் படி குற்றம். குற்றவியல் தண்டனை சட்டங்கள் அதை தனியாக கையாள்வது ஒரு பக்கம் இருந்தாலும், இம்மாதிரியான தகவல்களை அடிப்படையாக கொண்டு அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்ய முடியும். அதற்கான அதிகாரம் தேர்தல் அலுவலருக்கு உண்டு. 

ஒரு ஊரறிந்த நடிகர், தன்னுடைய வருவாய் இவ்வளவு தான் என்று பகிரங்கமாக பொய் சொல்லி, மக்களுக்கு விபூதி அடிக்க பார்க்கிறார். (அப்பன் கையில வேல் எடுத்தா, புள்ள விபூதி அடிக்கிறது நியாயம் தானே!) அதையே தன்னுடைய வருமான வரி படிவத்திலும் செய்கிறார். சட்ட ரீதியாகவும், பொது வெளியின் நியாயப்படியும் அயோக்கியத்தனம். இன்னும் கூடுதலாக சொல்லப் போனால், ஊரறிந்த ப்ராடுத்தனம். இது ஒரு சீரியசான பிரச்சனை, ஆனால் இன்றைக்கு இருக்கக் கூடிய ‘கும்பல்ல கோவிந்தா’ மனநிலையில் யாருமே இதை சீரியசாக பேச மாட்டார்கள். 

எதிரணி வேட்பாளரோ, ஊடகங்களோ, தேர்தல் ஆணையமோ ஒரு கேள்வியும் கேட்காது. அப்படியே யாராவது வழக்கு தொடர்ந்தாலும் (மோடியின் மீது இதை போல சொந்த நிலத்தை காட்டாமல் மறைத்த ஒரு வழக்கு இருக்கிறது.) அடுத்த 3 - 4 தேர்தல்கள் முடிந்து, உதயநிதியே VRS வாங்கலாம் என்று நினைக்கும் போது தான் தீர்ப்பே வரும். 

ஏமாறப்போகும் தமிழ் மக்களே.. எமது வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.