30/03/2021

நண்பன் - நண்பனின் அப்பா - நான்...

 


நண்பன் : அப்பா... எங்க காதலுக்கு தடை போடாதீங்க. எங்க காதல் தெய்வீகக் காதல்..

நண்பனின் அப்பா : அது என்னடா தெய்வீகக் காதல்?

நண்பன் : என் பெயர் பரமசிவம். என் காதலி பெயர் பார்வதி. அதான் அப்படி சொன்னேன்..

அப்பா : ஏன்டா உருப்புடாதவனே... உன் நண்பன் தானே இவன்.. எந்த பொண்ணு  பின்னாடியாவது சுத்தி இருக்கானா..? இல்ல லவ்வு கிவ்வுனு ஏதாவது பண்ணியிருக்கானா...

நான் : அப்பா நமக்கு இந்த பொண்ணுங்கனாளே அலர்ஜி... அதனால் தான் நான் பள்ளி கூடத்துல இருந்தே ஆண்கள் பள்ளி கூடமா தேடி கண்டு புடுச்சி சேர்ந்து படிச்சேன்...

நண்பன் : டேய்.. நீ லவ்வும் பண்ணாம.. கல்யாணமும் பண்ணாம எங்க உசுர ஏன்டா எடுக்குற...

நான் : நீ லவ் பண்ணி கல்யாணம் பண்ணுறதுக்கு நான் என் சுதந்திரத்த பலி கொடுக்கனுமா... அய்யோக்கிய பயலே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.