26/06/2021

நீ கொடுத்த வலி...

 




நீல வானத்து மை தொட்டு
என் சிந்தை யெனும்
கூர் முனையில் எழுதினேன்
நீ தொடுத்த வலிகளை...

நீல வானத்து மை தீர்ந்ததடி..
நீ தொடுத்த வலிகள் மட்டும் 
இன்னும் தீரவில்லையடி...

நீ தொடுத்த 
தீரா வலிகளை..
எந்தன் சுவாசத்தில் 
எழுதிக் கொண்டிருக்கிறேன்..

இவ்வுயிர் 
உடலைப் பிரிந்தாலும்..
நீ தொடுத்த வலிகள் 
பிரிந்திடுமோ - இல்லையோ..
நான் அறியேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.