27/06/2021

வாழ தகுதியற்றவன்...

 




உள்ளம் விரும்பும் உறவுகளிடம்
நெருங்கி பழக நினைத்தாலே
நெஞ்சோரத்தில் பயமொன்று
நெருப்பாய் சுட்டெரிக்கிறது..

பிரிவென்ற இறையை கொத்த
விதியென்ற பறவை
வாழ்க்கையென்ற வானில்
சுற்றித் திரிகிறது...

அதனாலே
அன்பானவர்களிடம்
அளவாக பேசி
ஆதரவை பூசி
கைவிடக் கூடாதென்று
கண்ணோரம் 
கண்ணீர் வந்தாலும்
கவனமாக 
காவல் காத்து வருகிறேன்
சில உறவுகளை...

ஏனெனில்...
வாழ தகுதியற்ற 
ராசியில்லாத மனிதன் நான்...

😏😏😏

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.