27/06/2021

அழ கூட தெரியுமா உனக்கு..

 




கால் கடுக்க நின்றேன்,
கண்டுகொள்ளாமல் போனாய்....

கல்லறையாய் நிற்கிறேன்,
கண்ணீர் விடுகிறாயடி...

மலர்தூவி யாசித்தேன்.... 
மறுத்தாய்...

மலர்தூவி வந்து 
புதைத்திருக்கிறார்கள்...
மண்ணுக்குள்....

உனக்கு அழத் தெரியும்
என்பதை கூட
இப்போது தான் 
உணர்கிறேன்...

யார் அங்கே ...
இவளை 
அழைத்துச் செல்லுங்கள்..

என் கல்லறையாவாது மிச்சமிருக்கட்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.