15/07/2021

என் இதயம் உடைந்து போனதுடி...

 




உன்னை நினைத்து துடிக்கும்
என் இதயம்...

உடைந்து கிடக்கும்
என் இதயத்தை...

என்னுள் வந்து பார்
சிறிது நேரம்...

என் தனிமையில் என்னுள்
வந்த வார்த்தைகளும்...

வர மறுத்த
வார்த்தைகளையும்...

கிறுக்கலாக்கி
வைத்திருக்கிறேன்...

என்னவளாய் நீ மீண்டும்
என்னுடன் வருவாய்...

அன்று உனக்கு பரிசளிக்க
வைத்திருகிறேனடி...

உன்னில் தொலைந்து
போன என்னை...

நான் தேடிக்கொண்டே
இருக்கிறேன்...

என்னை நீ பிரிந்து
சென்றது எதனால்...

கரணங்கள் தேடி தேடி என்
காதலை நான் வளர்கிறேன்...

என் மனதில் யாரும் வர
மறுத்த நான்...

தனிமை என்னும்
பயணத்தில் பயணிக்கிறேன்...

உன்னோடு நான் நடைபோட்ட
பாதையில் தனிமையில் நான்...

யாரோ ஒருவளை போல் வந்து
என் நலம் கேட்கிறாயடி...

கணவனோடு வந்து
கையசைத்து செல்கிறாயடி...

புன்னகையுடன்...

உன் புன்னகை ஒன்றே
போதுமடி எனக்கு.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.