14/07/2021

வெற்று காகிதமானேன் நான்...

 




கரையினை தொட்டு செல்லும்
அலைகளை போல...

உன் நினைவுகள் என்னை எப்போதும்
தொடர்ந்து கொண்டே இருக்குதடி...

நம் காதலின் நினைவுகளை
உள்ளத்தில் மட்டுமல்ல...

காவியமாக படைக்க முயற்சித்து
கொண்டு இருக்கிறேன்...

நாம் கைகோர்த்து நடந்த
நினைவுகள்...

நித்தம் நித்தம்
என்னை தொடருதடி...

இன்று நீ வேறொரு
கைகோர்த்து சென்றதால்...

என் கைகோர்த்து
என்னை தொடர்கிறது...

உன் நினைவுகளை சுமந்த
காகித காவியம்...

இன்று என்னோடு...

என் வாழ்வோ நீயின்றி
வெற்று காகிதமாக.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.