14/07/2021

உன்னோடு கனவுகளில் வாழ்கிறேன்...

 



உயிர்களின் வாழ்க்கையில் பிறப்பு
என்பது இறந்த காலம்...

உயிர்களின் இறப்பு என்பது
எதிர்காலம்...

உயிர்களின் வாழ்க்கை என்ற
நிகழ்காலத்தில்...

நான் உன்னோடு சேர்ந்துவாழ
பேராசை கொண்டேன்...

பேராசை பெருநஷ்டமாம்
அது என் வாழ்வில் உண்மைதான்...

நிகழ்காலத்தில் நிஜமாக உன்னோடு
சேர்ந்துவாழ முடியவில்லை...

நிழல்கள் தொடராத இரவில் 
உன்னோடு சேர்ந்து வாழ்கிறேன் கனவில்...

உன்னோடு இல்லை என்றாலும்
உன் நினைவுகலோடாவது
தினம் தினம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.