29/07/2021

என்னை மறந்து விடு என்று சென்றாய்...

 




உயிராக நேசித்த என்னை
மறந்துவிடு என்றாய்...

வார்த்தையை கேட்ட நான்
புன்னகை பூத்தேன்...

உனக்கும் சம்மதமா என்று 
புன்னகையுடன் சென்று...

வேறொருவன் கைபிடித்து 
ஒரு தாயாக இன்று நீ...

ஆனால் நானோ...

கண்ணுக்குள் உன்னை
வைத்து இருக்கிறேன்...

உன் பிரிவால் 
கண்கள் அழுவதால்...

கண்ணுக்குள் இருக்கும் 
நீ கலங்கிவிடகூடாது என்று...

புன்னகை பூத்தேன் என்பதை 
நீ உணரபோவது எப்போது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.