20/07/2021

உன் நினைவுகள் என்னைவிட்டு மறையாது...

 




நீ என் உயிர் என்று
நினைத்து...

உன்னையே நான்
சுவாசிக்கிறேன்...

உரிமையோடு அன்பாக
சில வார்த்தைகள் உன்னிடம்...

என்னோடு உரிமை கொண்டாட
நீ யார் என்கிறாய்...

உன்னை
தொடரும் எனக்கு...

நீ அவ்வபோது
தரும் வெகுமானம்...

அவமானங்கள்
மட்டுமே...

போதுமடி இனியும் உன்னை
தொடர மாட்டேன்...

உயிராக நேசித்த என்னை
நீ யார் என்கிறாய்...

உன் எதிரில்
மட்டுமல்ல...

உன் வாழ்விலும் இவன்
இருக்க மாட்டான்...

என்றாவது நீ என்
அன்பை உணர்ந்து...

திரும்பி பார்க்கும் நேரம்...

நான் இருப்பேன்...

உன்
நினைவுகளோடு அல்ல..

நினைவு சின்னமாக இருக்கும்
அந்த கல்லறை வரிசையில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.