23/08/2021

அப்பா vs மகன்...

 




முருகேசு : அப்பா உன்னை கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் '

அப்பா : எதுக்குடா என்னை வரச் சொல்றான் ?"

முருகேசு : கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க..

9 அ 7 ஆல பெருக்கினா என்ன வரும்னு..?

63 ன்னு சொன்னேன் ..

அப்பா : சரி அப்புறம்... 

முருகேசு : 7அ 9 ஆல பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க ..

அப்பா : அதே எழவு தானேடா. வரும்... சரி நீ என்ன சொன்ன.. ?

முருகேசு : அதே எழவு தானேடா வரும்னு சொன்னேன் ..உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க "

அப்பா : சரி , சரி நாளைக்கு வரேன் " 

அடுத்த நாள்...

முருகேசு : அப்பா, ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா ?

அப்பா : இல்லடா நாளைக்கு வரேன்..

முருகேசு : சரி நாளைக்கு கணக்கு டீச்சர பார்த்துட்டு அப்படியே பி.டி. டீச்சரையும் பார்த்துடு..

அப்பா : எதுக்குடா ?

முருகேசு : drill இருந்தது ..முதல்ல வலது கையத் தூக்கச் சொன்னாரு செஞ்சேன்..
அப்றம் இடது கையத் தூக்கச் சொன்னார். செஞ்சேன்..
ரெண்டு கையயும் தூக்கிட்டே வலது கால தூக்கச் சொன்னாரு தூக்கினேன்..
அப்றம் இடது கால தூக்குன்னு சொன்னாரு .

அப்பா : ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிக்க முடியும்? லூசா அவன்?.. சரி நீ என்ன பண்ணுன..? 

முருகேசு : ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படிடா நிக்க முடியும் லூசாடா நீ னு கேட்டேன்... உங்கப்பாவை கூட்டிட்டு வான்னு சொல்லிட்டாரு..

அப்பா : சரி சரி நாளைக்கு வந்து பார்க்கிறேன்..

அதற்கு அடுத்த நாள்..

முருகேசு : இன்னிக்கு ஸ்கூலுக்கு போனியாப்பா 

அப்பா : இல்லடா நாளைக்கு வரேன்..

முருகேசு : நீ போக வேணாம் பா..

அப்பா : ஏண்டா?

முருகேசு : ஸ்கூலேர்ந்து என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க..

அப்பா : ஏண்டா..? என்னாச்சுடா?

முருகேசு : ப்ரின்சிபல் ரூமுக்கு வரச் சொன்னார் .. அங்க கணக்கு டீச்சர், பி.டி. டீச்சர், சயின்ஸ் டீச்சர் மூணு பேரும் இருந்தாங்க..

அப்பா : சயின்ஸ் டீச்சரா.. அந்த நாய் ஏன்டா அங்க இருந்தான் ?

முருகேசு : அதைத் தான் பா நானும் கேட்டேன்..  

டிஸ்மிஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க...

😂😂😂😜

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.