15/11/2023

நாம் தமிழர் கட்சியை தோற்றுவித்த அண்ணன் சுபா.முத்துக்குமார் அவர்களின் பிறந்த நாள் இன்று...


சீமான் அவர்களுக்கு குறைந்தபட்ச அறம் ஏதாவது இருந்தால் அவரது நினைவிடத்தையாவுது  விட்டு வைக்க வேண்டும்.

அண்ணன் முத்துக்குமார் தான் பிறந்த சாதிக்காக உழைத்து வேலை செய்து இருந்தால் இன்றைக்கு தமிழ் நாட்டின் முக்கிய அமைச்சராக கூட இருந்து இருக்க முடியும்.

சுப.முத்துக்குமார் நினைவு நாளில் சீமான் அவர்கள் தனது மகனுக்கு எனது கிராமத்தின் அருகே  காது குத்து விழா நடத்தினார் பகட்டாக. அன்று வழியெங்கும் சுப. முத்துக்குமார் அண்ணனுக்கு  வீரவணக்க சுவரொட்டி அடித்து ஒட்டினோம். 

நானெல்லாம் எளிய மனிதன்   நாம் தமிழர் கட்சி போன்ற  அரசியல் சக்தியின்  இன்றைய நிலைக்கு  முன்னால் ஒன்றும் செய்ய முடியாது தான்.

இனத்திற்காக செத்தவனுக்கு இடுகாடு இல்லாமல் ஆக்கியவர்கள் மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்த சிங்கள பேரினவாதிகளுக்கு நிகரனவர்கள்.

அறம் வெல்லும் என்பது இயற்கை நியதி.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.