11/06/2017

பாஜக மோடி அரசும் ஊழலும்...


கங்கையை சுத்தம் செய்ய இதுவரை மட்டும்  11 ஆயிரம் கோடி செலவு,  இது வரை ஒன்றும் தூய்மை செய்யபடவில்லை..

இதைப் பற்றி யாரும் பேச மறுக்கிறார்கள் இந்திய மக்களும் எப்போது விழிப்படைய போகிறார்களோ?
இந்துத்துவ அடிமைகளும் எப்போது உணரப் போகிறதோ? வேதனை...

Narendra Modi ஆட்சி பதவியேற்ற போது 2020 க்குள் கங்கை நதி சுத்தம் செய்யப்படும் என்று கூறி இருந்தார்..

பிறகு 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கங்கை நதி சுத்தம் செய்யும் திட்டத்தின் முதல் கட்டம் முடிவடையும் என கூறி இருந்தார்.

பிறகு அதைப் பற்றி இரண்டாண்டுகள் பேசாமல் மௌனம் காத்தார்கள்
Bharatiya Janata Party (BJP) யின் மத்திய அமைச்சர்கள் மற்றும் மோடி உட்பட..

பிறகு திடீரென்று இந்த ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 11 ஆயிரம் கோடி நதிநீர் சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது என்று கணக்கீடு வந்தது.

பிறகு அதிலிருந்து மௌனமாக இருந்தார்கள் தற்போது திடீரென்று பாஜக அமைச்சர் உமா பாரதி கங்கை நதியைச் சுத்தம் செய்ய 10 வருடங்கள் ஆகும் என கூறியுள்ளார்..

ஆனால் கங்கை நதியில் ஒரு துளி நீர் கூட சுத்தம் செய்யப்படவில்லை என்றும், தினமும் 3000 லிட்டர் வரை அசுத்தமான நீர் கங்கை நதியில் கலக்கிறது என்றும் தேசிய தூய்மை தீர்ப்பாயம் ஆய்வு செய்து தெரிவித்துள்ளது.

ஒரு வேலையும் ஆகவில்லை ஆனால் தற்போது வரை 11 ஆயிரம் கோடிகள் கணக்கு காட்டியுள்ளார்கள் பாஜக ஆட்சியாளர்கள்..

ஆனால் கங்கை நதி சுத்தமான பாடில்லை, பிணங்களும் கழிவுகளும் மிதக்கத் தான் செய்கிறது..

ஆக பணமெல்லாம் எங்கே?

பதினோராயிரம் கோடிகள் எவன் அப்பன் வீட்டு பணம்?

கங்கை நதி அசுத்தமாவதே அகோரிகளால் தான், அவர்கள் தான் பிணங்கள் உட்பட அனைத்து கழிவுகளையும் மிதக்க விடுகிறார்கள், ஆக அவர்களைச் சார்ந்தோரே அசுத்தம் செய்து விட்டு அவர்களே அதனை சுத்தம் செய்ய பல ஆயிரம் கோடிகள் ஒதுக்கி, அதை சுத்தமும் செய்யாமல் கோடிகளை விழுங்கினால் என்னதான் அர்த்தம்?

இந்திய மக்களும் இந்த புள்ளி விவரங்களை அறியாமல் தங்கள் பணத்தைதானே கொள்ளையடிக்கிறா
ர்கள் என்ற வருத்தமும் இல்லாமல் இருக்கிறார்கள், இந்துத்துவ பாசிச பயங்கரவாத Rashtriya Swayamsevak Sangh : RSS , Hindu Munnani கூட்டமும் இதனை உணராமல் எதற்க்கெடுத்தாலும் பாரத் மாதாகி ஜெ என்று ஊளையிடுகிறது.

காலக் கொடுமை..

ஊழல் இல்லாத ஒரே கட்சி பாஜக தான் என்று தினந்தோறும் ஊளையிடும்
Tamilisai Soundararajan , H Raja , Pon Radhakrishnan , Vanathi Srinivasan , KT Raghavan ஆகிய டேஷ் பக்தர்களிடம் இந்த பதினோராயிரம் கோடி என்னவாயிற்று என்றுக் கேட்டால் தேசத் துரோகி என்பார்கள். அயோக்கியர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.