06/06/2017

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா விற்பனை...


அந்நிய நாடுகளிடம் பணம் வாங்கி கொண்டு இந்தியாவை விற்கும் ஆர்.எஸ்.எஸ் வியாபாரிகள்.

முதலில் இதை கேட்கும் போது நம்ப முடியவில்லை. பின்னர் இதன் உண்மைத்தன்மை தெரிந்ததும், ஒருவித அச்சம் தொற்றிக் கொள்கிறது.

இந்திய நாடு என்பது 120 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு மாபெரும் சந்தை. இப்படி ஒரு மாபெரும் சந்தையில் எத்தனை ஆயிரம் கோடிகள் புரளும் என்பதை கணக்கிட்டால் தலையே சுற்றும்.

இப்படிப்பட்ட ஒரு மாபெரும் சந்தையை எப்படி கைப்பற்றுவது என்று யோசித்த அந்நிய நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு திட்டம் தீட்டியது.

அந்த திட்டத்தின்படி, யாரை விலைக்கு வாங்கினால் இது சாத்திய என்று யோசித்தது. அப்போதுதான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தரகர் ஒருவர் இந்த திட்டக் குழுவிற்கு அறிமுகமானார்.

அப்போது, ஆர்.எஸ்.எஸ் தரகர் வைத்த கோரிக்கையின்படி, 2014  நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சியை வெற்றி பெற வைத்தால் அந்நிய நாடுகள் கேட்கும் அளவிற்கு அவர்களுக்கு இந்தியாவின் வளங்களை தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. அந்நிய நாடுகளும் மோடியின் தேர்தல் செலவிற்கு பணத்தை வாரி இரைத்தார்கள். அந்நிய நாட்டு அடிமையான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மோடியும் வென்றார்.

அதன் விளைவுதான் இன்று மீத்தேன் திட்டம், எரிவாயு திட்டம், புதிய அணு உலைகள், மரபணு மாற்ற பயிர், மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரிப்பு..

இந்த ஒப்பந்தத்தின் படியே, அந்நிய நாடுகளின் அடிமையாக எல்லா நாட்டிற்கும் சென்று இந்தியாவை எழுதி குடுத்துவிட்டு வருகிறார் மோடி.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் உள்ளூரில் எதிர்க்கும் கிருத்துவ, இஸ்லாமிய நாடுகளிடம்தான் இப்படி சொந்த நாட்டை விற்கிறார்கள்.

இன்னும் இந்த நாட்டை எப்படியெல்லாம் இவர்கள் சீரழிக்க போகிறார்கள் என்று ஒவ்வொரு இந்திய குடிமகனும் எங்கும் நிலைமை....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.