06/06/2017

பாஜக பினாமியாக செயல்படும் தமிழக எடப்பாடி அரசின் தொடரும் அராஜகம்...ko


காவிரி உரிமைக்காகவும், மீத்தேன் திட்டத்தினை எதிர்த்தும் தொடர்ந்து போராடி வந்த தோழர் பெ.மணியரசன் அவர்களை கதிராமங்களம் செல்லும் வழியில் காரை மறித்து கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது தமிழக அரசு.

கதிராமங்களம் ஓ.என்.ஜி.சி குழாய் பதிப்பிற்கு எதிராக குரல்கொடுத்த பேராசிரியர் த.செயராமன், விசயரங்கன், சீனிவாசன், மதிமுக வைச் சேர்ந்த ஆடுதுறை முருகன் உள்ளிட்ட 11 பேர் ஏற்கனவே சிறையிலடைக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில் கதிராமங்களம் வழியில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் அவர்களையும் கைது செய்திருக்கிறது தமிழக அரசு.

முழுமையாக பாஜகவின் கைக்கூலியாக செயல்பட்டு மக்கள் விரோத திட்டங்களையும், மீத்தேன் திட்டத்தினையும் தமிழகத்தில் அமல்படுத்தும் நோக்கில் அடக்குமுறைகளை ஏவி வருகிறது தமிழக எடப்பாடி அரசு. மக்கள் விரோத திட்டங்களை விரட்ட கைகோர்ப்போம்.

தமிழக செயல்பாட்டாளர்களை முடக்க முழுவெறியுடன் பாசிச பாஜக-ஆர்.எஸ்.எஸ் கூட்டணி அதிமுக அரசினை வைத்து களமிறங்கியிருக்கிறது.

பாசிச கூட்டணியினை வீழ்த்த ஒன்றிணைவோம். தமிழகத்தினை காத்திடுவோம்.

தோழர் பெ.மணிய்ரசன் அவர்களின் கைதினை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

பதிவு - மே பதினேழு இயக்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.