04/07/2017

GST பற்றி எரிவதால்... அது தொடர்பான ஒரு பதிவு...


மறைந்த முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் கலந்துக்கொண்ட திட்டக்குழு கூட்டம்...

ஜெ. சென்று தமிழக தேவைகளை எடுத்துக்கூறி.. நாற்பத்து ஐந்து ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய கேட்டார்.. அப்போது திட்டக்குழு கமிஷன் துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா மறுத்துவிட்டு 22 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்வதாக கூறினார்..

கடுப்பாகிபோன ஜெ.. கூட்டத்தில் இருந்து வெளியே வந்தார்.

அங்கே கூடியிருந்த பத்திரிகையாளர்கள் விபரம் கேட்க விட்டு விளாசி விட்டார் ஜெ..

தமிழகத்தில் இருந்து வருடந்தோறும் 78400 கோடி பலவகைகளில் மத்திய அரசுக்கு தருகிறோம்..

ஆனால் எங்கள் தேவைக்கு நாங்கள் இங்கே வந்து காத்திருக்கும் நிலை உள்ளது.

அப்படியும் நாங்கள் கேட்கும் தொகையை தர மறுக்கிறார்கள்...

இது மிக முக்கிய உற்பத்தி மாநிலமான தமிழகத்தை உதாசீனப் படுத்தும் செயல்.. எனக்கூறி.. தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றுவிட்டார்.. ஆடிப்போனது மத்திய அரசு..

உடனடியாக உயர் அதிகாரிகளை அனுப்பி 36000 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் இது திட்டமிட்ட செலவினங்களுக்கு மட்டுமே.
திட்டமிடா உபரி / திடீர் செலவுகளுக்கு மேலும் நிதி ஒதுக்க மத்திய அரசு எப்போதும் தயாராக இருப்பதாக சொல்லி மேடத்தை சமாதானம் செய்தார்கள்..

இப்படி ஆளுமை உள்ள தலைவர் வழிநடத்திய இந்த மாபெரும் இயக்கம் இன்று.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.