30/08/2017

மகாராஷ்டிராவில் நாக்பூர்-மும்பை இடையே செல்லும் துரந்தோ விரைவு ரயில் திதிவாலாவிற்கு அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது...


நாக்பூரில் இருந்து மும்பை செல்லும் இந்த ரயிலின் 5 பெட்டிகள் நடைமேடை மீது மோதியது. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லும் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும், பலர் மோசமான நிலைமையில் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து மீட்புப் படையினர் தற்போது கல்யாணிலிருந்து விபத்து நடந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.