12/09/2017

நீட்டை எதிர்த்து நளினி சிதம்பரத்தை அமர்த்தி 3 முறை உயர்நீதிமன்றத்தையும் உச்சநீதிமன்றத்தையும் நாடி, லட்சக்கணக்கில் செலவு செய்த "காவ்யா நக்கீரன்" என்கிற மாணவி யார் ?


எந்த பள்ளியில் எந்த சிலபஸில் படித்தார் ? எவ்வளவு மதிப்பெண் பெற்றார் ?

நீட் தேர்வு எழுதினாரா ? அதில் எவ்வளவு மதிப்பெண் பெற்றார் ?

அவர் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில், அவருக்கு சீட் கிடைக்காமல் போய் விடும் என்று அவர் கோரினாரா / கூறினாரா ?

அப்படி அவர் கோரி இருந்தால், அந்த கோரிக்கையை எந்த நீதிமன்றமாவது பரிசீலனை செய்ததா ?

அவ்வாறு பரிசீலனை செய்திருப்பின், எந்த ஆவணங்கள் / பட்டியல்களின் அடிப்படையில் பரிசீலனை செய்தனர் ?

ஆதார ஆவணமே இல்லாத நிலையில் காவ்யாவின்  வழக்கே செல்லாது என்று ஏன் தமிழக அரசு தலைமை வக்கீல் முத்துக்குமாரசாமி வாதிடவில்லை ?

காவியாவின் தகப்பன் யார் ?

அவரின் வருமானம் என்ன ?

இப்போது காவியா என்ன ஆனாள் ?

MBBSல் சேர்ந்தாளா இல்லையா ?

எந்த கல்லூரியில் சேர்ந்துள்ளாள் ?

வழக்கு தொடுக்கவே தகுதி இல்லாத சூழலில், ஒரு முகாந்திரம் இல்லாத, நிலைக்கத்தக்க வழக்காக இல்லாத ஒரு வழக்கில் எப்படி 3 நீதிமன்றங்களும் நீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கின ?

இந்த கேள்விகளுக்கு விடை பெற எந்த செய்தி நிறுவனமானது முயலுமா ?

இல்லை ஸ்டுடியோவில் உட்கார்ந்து கொண்டு, ரிப்போர்ட்டர்களும் அரசும் கொடுக்கும் தகவல்களை, செய்திகள் என்ற பெயரில் தொடர்ந்து ஒளிபரப்பி மக்களை ஏமாற்றுவீர்களா ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.