08/09/2017

பூம்புகார் மர்ம முடிச்சி இறுதி பகுதி...


இங்கு கண்டு பிடிக்கப்பட்ட முக்கியமானவைகள் சிலதை முதலில் பாப்போம்.

எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்பை தமிழர்கள் என்ற ஒற்றை காரணம் காட்டி மறுத்துள்ளது இந்தியா என்பது உங்களுக்கு புரியும்..

பூம்புகாரில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட முடிவில் பின் வருபவைகள் ஆதாரபூர்வமாக தெரிகின்றது.

1 இயேசு கிருஸ்து பிறப்பதற்கு முன்பே உலகில் ஆங்காங்கே உள்ள நாகரீகத்தில் தமிழக நாகரீகமும் இருந்துள்ளது.

2 சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் அன்றைய காலத்திலையே சுட்ட செங்கற்கள் பயன்படுத்தும் முறை உள்ளதாக அறிய முடிகிறது.

3 இந்நகரம் கடலில் 75 அடி ஆழத்தில் மூழ்கி இருப்பதால் அன்றிலிருந்து இன்றுவரை கடல் 75 அடி உயர்ந்துள்ளதாக அறிய முடிகிறது.

4 இக்காலகட்டத்தில் தான் குமரி கண்டம் நீரில் மூழ்கி அழிந்தது என்ற வரலாற்று பேருண்மையும் அறிய முடிகிறது ,

5 அந்த வகையில் இயேசு கிருஸ்து வுக்கு முன் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குமரிக்கண்டம் இருந்ததாகவும் அறிய முடிகிறது.

6 இந்த காலகட்டத்தில் தான் ஆழி பேரலையினால் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தனி நாடாகவும் மாற வசதியாக பிரிந்துள்ளது.

7 இந்திய பெருங்கடல் மற்றும் வங்க அரபிக்கடல் என்ற தோற்றம் முழுமையாக வெளிப்பட்டது..

8 இந்த இரண்டு கடல்கள் பிரித்தமையால் உலக வரைபடமும் சரியான அளவில் இன்றுவரைக்கும் முழு வடிவம் பெற்றது...

9 கி மு , 17,௦௦௦ அல்லது 10,௦௦௦ ஆண்டுகளில் தான் பனிப்பாறைகள் உருகியதால் கடல் நீர் மட்டம் உயர்ந்து பல நாடுகளை அழிக்கவும் செய்துள்ளது என்ற வரலாற்று உண்மை தெரிந்துள்ளது.

10 இயற்கையின் மாறுபாடுகள் முக்கியமாக கடலால் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் உட்பட நில நீர் பகுதி மாற்றங்கள் என்பவற்றை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளது..

இவ்வளவு முக்கியமான வரலாற்று தகவல்களை தந்த பூம்புகார் ஆய்வறிக்கையை தமிழகத்தில் மட்டுமல்ல முழு இந்தியாவிலும் வெளியிட கூடாது என்ற கேடுகெட்ட பார்ப்பனீயம் வேலை செய்தது.

அதன் தாக்கத்தால் தமிழகத்தில் கூட இவர் வெளியிட முடியவில்லை.

இவ்வளவையும் கேமராவில் பதிவு செய்தவர் இதை வெளியிட முடியாமல் தவிர்த்தார்..

காரணம் இந்திய ஊடகங்கள் இந்த ஆய்வை வெளியிட கூடாது என்று கட்டளை..

இதனால் நொந்து போன கிரஹாம் அமெரிக்காவின் லேர்னிங் தனியார் தொலைக்காட்சியில் நெடும் தொடராக அண்டர் வேல்டு எனும் தலைப்பில் வெளியிட்டார்..

ஆச்சர்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்திய இந்த தொடர் மூலம் வெளிநாட்டு பயணிகள் பூம்புகார் நோக்கி வரவும் ஆரம்பித்தனர்..

இந்நிலையில் சில நல்லவர்களின் தொடர் அழுத்தத்தால் ஒரே ஒரு நாள் மட்டும் இந்த ஆய்வை வெளியிட அரசு அனுமதித்தது அதுவும் எங்கே தெரியுமா ?

தமிழகத்தில் அல்ல பெங்களூருவில்...

பெங்களுர் கண்காட்சியில் ஒரே ஒரு நாள் மட்டும் இந்த ஆய்வுகள் கண்காட்சியில் வைக்கப்பட்டது..

இதன் முக்கியத்துவம் உணர்ந்த லேர்னிங் சேனல் நெடுந் தொடராக underworld எனும் தலைப்பில் வெளியிட்டு தமிழின எதிர்ப்பு வெறியர்களுக்கு தக்க பாடம் புகட்டியது..

என்னதான் இருந்தாலும் தமிழகத்தின் ஆய்வை தமிழகத்தில் திரையிட முடியாமல் போனதற்கு இந்த வட நாட்டு
கும்பல்களே காரணம்...

இப்போது சொல்லுங்கள்.. இந்தியா யாருக்கான நாடு.? 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.