25/09/2017

தமிழர் பிரச்சனைக்கு வர மாட்டோம்.. தமிழர்களுக்குள் பிரச்சனை வர செய்வோம் - இந்துத்வா...


இந்துத்வாவிற்கு
'தமிழ் நீச பாசை'
'தமிழர் சூத்திரர்'
ஆரியர் பிழைப்பு நடத்த மட்டும்
தமிழர் மதம் இந்துவா?

காவிரி பிரச்சனையில் தமிழருக்கான ஆற்று நீர் உரிமையை மறுத்ததோடு தமிழரை கன்னடன் நிர்வானப்படுத்தி அடித்தான்.
தமிழர் வாகனங்களை தீக்கரையாக்கினான்.
தொழில் நிறுவனங்களை சூரையாடினான்.

இந்த தமிழர் பிரச்சனைக்கு எந்த இந்து அமைப்புகளும் வரவில்லை. இந்த பிரச்சனையை காவிரி ஆனையம் அமைத்து தீர்த்திருக்க வேண்டிய மத்திய பாசக (bjp) அரசு செய்யவில்லை, தமிழக பாசக கட்சி வலியுருத்தவுமில்லை.

தமிழருக்குள் பிழவு ஏற்படுத்த மதத்தை வைத்து வியாபாரம் செய்கிறது.

இலங்கையில் தமிழர்கள் இந்துக்கள் என்றால்,
சிங்கள பௌத்தன்/வடுக பௌத்தன் தமிழின படுகொலை செய்ததற்கு சர்வதேச விசாரணை நடத்த மத்திய பாசக அரசு மறுத்ததேன்?

தமிழர்கள் இந்துக்கள் என்றால் இலங்கை தனி தமிழ் ஈழ கோரிக்கையை இந்து மதவாத பாசக மறுத்திருக்குமா?

தமிழர்கள் இந்து என்றால் காட்டுக்குள் 20தமிழர்களை ஆந்திர அரசு சுட்டுக் கொன்றதை ஏன் கண்டிக்கவில்லை?

(காங்கிரசு எதிர் கட்சி தானே அப்போது கூட கண்டிக்கவில்லையே)

800தமிழக மீனவன் இந்துக்கள் என்றால்  வடுக பௌத்தனும் சிங்கள பௌத்தனும் கடலில் சுட்டு கொன்றதற்கு இந்திய அளவில் போராடவில்லையே ஏன்?

பாசக அறிவுரையாளர், இந்துத்வா சார்பாளர் சுப்பிரமணிய சாமி தமிழர்களை பொறுக்கி என்றானே, தமிழர்கள் இந்துக்கள் என்றால் ஏன் அவன் அப்படி சொன்னான்?

தமிழக பாசக மற்றும் இந்து அமைப்புகள் ஏன் கண்டிக்கவில்லை?

இந்துத்வா செயற்பாட்டாளர் தாக்ரே பல நூறு தமிழர்களை கொன்றானே, அடித்து மும்பையை விட்டு விரட்டினானே,
தமிழர்கள் இந்துக்கள் என்றால் ஏன் கொன்றான், ஏன் விரட்டினான்?

'தமிழர் பிரச்சனை எதற்கும் இந்துத்வா வராது,

மதத்தை வைத்து தமிழர்களுக்குள் பிரச்சனை செய்ய இந்துத்வா வரும்'

இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

இசுலாம் அரேபிய மதம் தான்..
கிறுத்தவம் யூத மதம் தான்..

அதே போல் இந்து மதமும் ஆரிய மதம் தான்..  தமிழர் மதம் அல்ல...

கிறுத்தவம், உலகாண்ட தமிழரை சூத்திரன் என்று சொல்லவில்லை.
இசுலாம், உலகின் ஒரு காலத்தின் ஆட்சி மொழியான தமிழை அருவருப்பான மொழி என்று கூறவில்லை.

ஆனால் இந்து மதம் தான் தமிழை நீச பாசை (அருவருப்பான மொழி) என்றது ஏன்?

பழந்தமிழர் கட்டிய கோவில்கள் எதுவும் இந்து மதத்திற்காக கட்டியவை அல்ல..

ஆசீவக(சமணம்) மதத்திற்கும், சைவ சமயத்திற்க்கும், வைனவ சமயத்திற்க்கும் நாட்டார் வழிபாடு, குல தெய்வ வழிபாடு, தெய்வ வழிபாடு இவைகளுக்கு கட்டப்பட்டவை!!

தமிழர்களின் கோவில்கள் ஆரியரிடமும் வடுகர்களிடமும் சென்றதும்
தமிழரின் ஆசீவகம் என்ற மதமும், சைவம் என்ற மதமும், வைனவம் என்ற மதமும் பின் நாட்களில் இந்து என்று மாற்றப்பட்டது.

சைவமும், வைணவமும் தமிழை போற்றி புகழுகிறது..

இந்து மதமோ தமிழை இழிவுபடுத்துகிறது எப்படி?

இந்தியாவில் மட்டும் ஆயிரக்கணக்கான வழிபாடுகள் உள்ளது அவர்கள் தங்களை ஒருபோதும் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டதில்லை.

தேசிய இன உரிமையை மறுத்த இந்தியம்
வழிபாடு உரிமையையும் மெய்யியல் கோட்பாடுகளையும் மறுத்தது.

தமிழர்கள் ஆரியரின் இந்து மதத்தால் பல இன்னல்களை சந்தித்தனர் மேலாடை அனிய கூட தடை என்ற நிலை ஆரிய மத்தாலும் வடுகர்கள் தெலுங்கர்கள்  ஆட்சியில் வந்தது.

இந்த கொடுமைகளை பொருத்துக் கொள்ள முடியாமல் ஐயா முத்துக்குட்டி சுவாமியால் ஐயா வழி என்ற மதமே உறுவானது.

தன் மதத்தை காப்பாற்ற இவரை உயிருடன் சமாதி கெட்டியவர்கள் பிராமணர்கள் ஆவார்கள்.

மேலாடை அணிய கூடாது என அடிமைபடுத்தப்பட்ட தமிழர் சமூகங்களை இடுப்பில் இருந்த துண்டை எடுத்து தலைப்பாகையாக போட வைத்தது, இந்த ஐயா வழி மதம்.

இன்றும் நாடார் சமூக மக்களில் ஒரு பிரிவினர் ஐயா வழி மதத்தை பின்பற்றி தலைப்பாகையும் நெற்றியில் சந்தனத்தால் நாமமும் இடும் வழக்கம் உள்ளது.

ஆரிய இந்து மதத்தை எதிர்த்து உருவானது தான் வள்ளலாரில் 'சமரச சுத்த சன்மார்க்க சங்கம்' ஆரியர் பிராமனரின் சாதி தீண்டாமையை இந்த மதம் முற்றிலும் எதிர்த்தது.

வருணாசிரம கொள்கையை கடுமையாக எதிர்த்தது இந்த மதம். இதனால் பெரும் கொடுமைகளை சந்தித்தார் வள்ளலார்.

தன் அருட்பாக்களால் இன்றும் வருணாசிரமத்தை எதிர்த்தும் சாதியை மறுத்தும் வருகிறார் வள்ளலார்.

திருமூலர், திருவள்ளுவர் தொடங்கி, சித்தர் பாடல்கள், வள்ளலார், ஐயா வழி வரை.. ஆரிய மதத்தை, இந்து வருணாசிரம கொள்கையை, சாதியை, தமிழர் சமூகம் தொன்றுதொட்டு கடுமையாக எதிர்த்தே வந்துள்ளது..

இப்படி வந்தேரிய ஆரிய பிராமணீய மதத்தையும் அவர்களின் கொள்கைகளையும் இந்தியாவில் வாழும் பல இன குழுக்கள் எதிர்த்துள்ளனர், எதிராக பல மதங்களும் உருவானது. பின்நாட்களில் மண்ணின் மைந்தர்கள் இசுலாம் மதத்திற்க்கு மாறவும் கிறுத்தவ மதத்திற்க்கு மாறவும் ஆரியரின் சாதி வருணாசிரம கொள்கையே காரணம் ஆகும்.

தமிழர்களுக்குள் ஒவ்வொரு குலத்திற்கும்,
ஒவ்வொரு தினையில் (நிலப்பகுதி) வாழும் மக்களுக்கும் வெவ்வேறு தெய்வ வழிபாடுகள் உண்டு.
நாட்டார் வழிபாடுகளும் இருந்தன.
இந்திரன் கண்ணன் முருகன் கொற்றவை என தினை தெய்வங்களும், சிவன் என ஒரு நாட்டிற்கான தெய்வமும் உண்டு.
இதே போல் இந்தியா எங்கும் பல குழுக்களாக வாழ்ந்த மக்களும் தங்கள் தெய்வ வழிபாட்டை கொண்டிருந்தனர்.

தமிழர் மரபில் விழைந்தவை தான் இந்த வழிபாடு முறையும். 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் தெய்வத்துள் மதிக்கப்படுவர்' என்ற ஐயன் வள்ளுவரின் குறளே இதற்கு சான்று.

அப்படி தான் தமிழ் சித்தரும், குமரிகண்டத்தின் மன்னருமான சிவன், செய்த மனித குலத்திற்கான கொடையை குடையை ஆட்சியை எண்ணி இந்தியா முழுவதும் சிவ வழுபாடு செய்கின்றனர். இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சமூகங்களின் பண்டைய வழிபாடு முறையை வைத்து அடையாளம் காணலாம் உண்மையான வரலாற்றை வெளிக்கொணரலாம். வட இந்தியா வரை சிவன் போற்றப்படுகிறான்.

'தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி' என்ற வாக்குக்கினங்க ஒரு வாழ்வை வாழ்ந்திருக்க கூடும்.

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் எப்படி பல நாடுகளை கொண்டிருந்த இந்த தீபகர்பத்திற்கு இந்தியா என்ற ஒற்றை பெயர் வந்ததோ அதே போல தான்,
பல சமயங்களை வழிபாடுகளை மதங்களை கொண்டிருத்த மக்களின் மதத்திற்க்கும் இந்து என்ற ஒற்றை அடையாளம் திணிக்கப்பட்டது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவானதும் இதையே வழிமொழிந்து பிறப்பு சாதி மற்றும் இறப்பு சான்றிதழ்களிலும் இதனையே திணித்து எல்லோரும் இந்து என்ற ஒரு உளவியலை உருவாக்கிவிட்டனர்.

சீக்கிய மதத்தை தழுவிய பின்பும் இந்து மத சட்டம் திணிக்கப்படுவதும்,
குடகு நாட்டு குடவா பிரிவு மக்கள் தாங்கள் இந்துக்கள் இல்லை எங்கள் தெய்வ வழிபாட்டிற்க்கும் இந்து மதத்திற்க்கும் சம்பந்தம் இல்லை என்கின்றது. இந்து என்ற மதம் திணிக்கப்பட்டதற்கு இவை சான்றுகள்.

இப்படி வழிபாடு முறைகளை அழிப்பது  மெய்யியலை மடைமாற்றுவது என்பது ஒரு வகையில் ஓர் பண்டைய இனம் பல்லாயிர கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த அனுபவ அறிவை பாரம்பரியம் என்ற பெயரில் மெய்யியலை தன் சமூகத்திற்கு தந்து செல்வதை அழிப்பது ஆகும்.

இறை நம்பிக்கை தேவை இல்லை சிலையை வணங்க தேவை இல்லை செம்மையாக  வாழ்ந்த முன்னோரின் பெருமையை தெரிந்துகொள்ள வேண்டாமா?

இன்று தன்மானத்தோடு உயர்ந்திருக்கும் பல தமிழ் சமூகங்களுக்கு முத்துக்குட்டி, சுடலைமாடன், கருப்பன், கள்ளழகர் போன்ற முன்னோரின் தியாகங்கள் தான் காரணம், அந்த வரலாறு நம் இனத்தை மீண்டும் அதே இடத்தில் விழவிடாமல் தவிர்க்கும் படிப்பினைகள்.

தமிழரை இந்துக்கள் என்று நம்ப வைத்து, அந்நிய படையெடுப்புகள் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் நடந்தது. இசுலாம் மதமாற்றத்தால் மலேசியா மற்றும் சிங்கையிலும்,  பௌத்த இந்து மதமாற்றத்தால் இலங்கையிலும்   வாழ்ந்த தமிழர் இன அடையாளம் இழந்து இன மாற்றத்திற்கு அட்பட்டனர். தமிழர் மெய்யியலை இழந்ததால் தமிழரின் அறிவியல் களவாடப்பட்டது. தமிழர் வரலாறு  ஆரிய வரலாறு ஆனது. தமிழர் சிந்து வழி நாகரிகம் ஆரியர் நாகரிகம் என இட்டுக்கட்டுவதை போல் நாளை குமரிக்கண்டம் ஆரியர் வாழ்ந்த நிலம் என்றும் சொல்லுவர்.

கடவுள் நம்பிக்கையால் மதம் மாறுவது தனிமனித விருப்பம். இங்கு கிறுத்தவ மதத்தை தழுவிய தமிழன் பொங்கல் கொண்டாடுகிறான். கேரளத்தில் இசுலாம் மதம் தழுவிய மலையாளி ஓணம் கொண்டாடுகிறான் தன் மதத்திற்குள் இருந்து கொண்டு.

ஆரியர்களின் பல நூறு ஆண்டுகால அகண்ட பாரதம் என்ற கனவு 'எல்லோரும் இந்து' என்ற கோட்பாட்டால் நிறைவேறி வருகிறது. பண்பாட்டு படையெடுப்பு நிகழ்த்து வருகிறது .

இதனால் தேசிய இனங்களுக்குள் சிறுபான்மை மதத்தை எதிரியாக்கி உள் முரனை உண்டுபண்ணி  தேசிய இனத்தை வலிமையிழக்க செய்து பெரும்பான்மை மக்களை அடிமைப்படுத்தி ஆள்கின்றனர்.  இந்து மத வருணாசிரம கொள்கை சிறுபான்மை ஆரியர் சுரண்டி திழைக்கவும், பெரும்பான்மை மண்ணின் மக்களை அடக்கி ஆளவும் மிகவும் உதவுகிறது.

நிறுவனப்படுத்தப்பட்ட இந்த மதத்தை விட்டொழிக்காமல் ஒற்றுமை வராது. நம்பிக்கை என்ற பட்சத்தில் இருக்கும் வரை மதம் கொடியது அல்ல.

தமிழர் மெய்யியல் மறுமலர்ச்சி பெற்றால் தான் இந்து மாயை ஒழிந்து தமிழர்கள் ஓங்க முடியும்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.